…
…
நண்பர் ஒருவரின் மூலம் சில பழைய புகைப்படங்கள் கிடைத்தன.
ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதையைச் சொல்கிறது…. அந்த புகைப்படங்களை பார்க்கும்போதே, அவற்றின் பின்னாலுள்ள கதைகள் நமக்கு தானாகவே நினைவிற்கு வருகின்றன…
————–
( 1887 – 1895 -ல்) முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய
பிரிட்டிஷ் எஞ்சினீயர் பென்னி குவிக் (John Pennycuick )
– அணயைக் கட்டுவதில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன்
எடுத்துக் கொண்ட புகைப்படம் –
…

…
அணை கட்டப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்…
…

…
1931, மார்ச் 24-ந்தேதி தூக்கிலிடப்பட வேண்டும் என்று
வெள்ளையர் ஆட்சியில் உத்திரவிடப்பட்டு – கலவரம் ஏற்பட்டு விடுமென்று
பயந்து, முதல் நாள், 23ந்தேதி, இரவிலேயே –
ரகசியமாக தூக்கிலிடப்பட்டு
வெள்ளைக்காரர்களாலேயே – ரகசியமாக தகனமும் செய்யப்பட்ட –
இந்திய சுதந்திர போராட்ட – புரட்சி வீரன் பகத் சிங் –
…

…
கப்பலோட்டிய தமிழர் –
வ.உ.சிதம்பரம் பிள்ளை, அவரது மனைவியுடன்…
…

…
தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும்போதே –
தலைவர் காமராஜர் தன் வீட்டில் தரையில் அமர்ந்து
சாப்பிடும் காட்சி….
…

…
தமிழகத்தின் 3 முதலமைச்சர்கள் – ஒரே ஃப்ரேமில் ….!!!
…

…
—————————————————————————————————–



Very Interesting.
தமிழில் : வார்த்தை — வாக்கியங்கள் — வரிகள் என்பனவற்றிற்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு என்பது உண்டு — அப்படி எண்ணிடலங்கா நபர்களை ஈர்த்து — வசீகரித்து — அவர்களின் மன ஓட்ட எண்ணமான ஒரு மாற்றத்தை விரும்பும் தன்மையை மையப்படுத்தி — வாசிக்க வைத்து — கருத்து பதிவுகளை இட வைத்து — விவாதிக்க வைத்த அந்த உன்னத வார்த்தைகள் கடந்த 10 ஆண்டுகளாக கோலோச்சியதை யாரும் மறைக்கவோ .. மறுக்கவோ முடியாது என்பது மட்டும் திண்ணம் — அந்த ஈர்ப்பான மந்திரம் : ” இன்றில்லா விட்டாலும் நாளையாவது
மாறுமல்லவா ? ” என்பது தான் … !!
vimarisanam – kavirimainthan சொல்கிறார்:
7:50 பிப இல் ஏப்ரல் 2, 2010 அன்று 100 இடுகைகள் முடிந்தவுடன் தாங்கள் எழுதியதை படிக்க தற்போதைய தளத்தின் படத்தில் உள்ள ” about ” என்பதை சுட்டினால் பல விவரங்கள் இன்றைய வாசகர்களுக்கு தெரியும் — புரியும் என்பது மட்டும் நிச்சயம் — ! // ” இன்றில்லா விட்டாலும் நாளையாவது
மாறுமல்லவா ? ” // என்பது என்றும் சிரஞ்சீவி தான் — எல்லா காரியங்களிலும் — காரணங்களிலும் — நடப்புகளிலும் …!!!
செல்வராஜன்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை என்னை ” about ”
வாசிக்க வைத்து விட்டீர்கள்….!!!
உங்கள் நல்லெண்ணங்களுக்கு நன்றி.
உங்களைப் போன்ற பல நண்பர்களின் ஆர்வத்தாலும், துணையாலும் தான்
நான் இவ்வளவு நாட்களாக தொடர்ந்து எழுதி வருகிறேன்.
பார்ப்போம்… இன்னும் எவ்வளவு நாட்களுக்கு முடிகிறதென்று…!!!
நம் கையில் என்ன இருக்கிறது…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இடுகைக்கு சம்பந்தமில்லாத ஒன்று.
https://minnambalam.com/k/2019/03/07/52
ஒவ்வொரு தளத்துக்கும், பத்திரிகைக்கும் ஒவ்வொரு அஜெண்டா உண்டு. அவர்களுக்குன்னு ஒரு கருத்து, செய்தியைச் சொல்லுதல் என்பது கிடையாது. ‘வரவுக்கேற்ற செலவு’ என்பதுபோலத்தான் எல்லாச் செய்திகளும்.
புதியவன்,
முடிந்தால், இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.
எனக்குத் தெரிந்த வரை மின்னம்பலம் திமுக சார்புடைய ஒரு செய்தி வலைத்தளம்.
அவ்வப்போது, வரவு கிடைத்தால், யாரைப்பற்றி வேண்டுமானாலும் “ஸ்பெஷல்” செய்தி போடும். (நல்லதாக வேண்டுமானாலும், கெட்டதாக வேண்டுமானாலும்…!!! )
இதைத்தவிர வேறு எதாவது சொல்ல வந்தீர்களா ?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்