…
…

…

…
இப்போதெல்லாம் ராஜா சார் நிறைய பேசுகிறார்…!!!
இளையராஜா –
இறைவன் நமக்கு கொடுத்துள்ள ஒரு மிகப்பெரிய கொடை….!
நேற்றிரவு தான் பார்த்தேன்….கடந்த ஆகஸ்டிலேயே வெளிவந்து விட்ட இதை எப்படி இவ்வளவு நாட்கள் பார்க்காமல் இருந்தேன் என்று தெரியவில்லை….
எம்.ஓ.பி.வைஷ்ணவ் (பெண்கள்) கல்லூரியில் நடந்த இளையராஜா அவர்களின் – சிறப்பான உரையாடலும், பாடல்களும் சேர்ந்த அருமையான நிகழ்ச்சியொன்று…
விமரிசனம் தள நண்பர்கள் அவசியம் கண்டு ரசிக்க வேண்டிய
ஒரு நிகழ்ச்சி என்பதால், கீழேயே பதிவு செய்திருக்கிறேன்.
————————
சங்கீதத்தை நான்
இப்படித்தான் கற்று கொண்டேன் : இளையராஜா…..
…
…
இது போனஸ் –
கவிஞர் கண்ணதாசன் நினைவாக …..
…
…
.
————————————————————————————————————–



அய்யா … ! திரு .இளையராஜா அவர்கள் 75 ம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தற்போது நடைபெற்று வருவதையொட்டி பல கல்லூரிகளில் அவரது நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது — இதில் நேர்காணல் — மாணவிகளின் கேள்விகள் — பாடல்கள் என்று சக்கைபோடு போடுகிறார் இசை ஞானி —
முன்பே நமது தளத்தில் எம் ஜி ஆர் ஜானகி கல்லூரி நிகழ்ச்சி பற்றி இடுகை வந்தது — தற்போது எம்.ஓ.பி.வைஷ்ணவ் (பெண்கள்) கல்லூரியில் நடந்த இளையராஜா நிகழ்ச்சிபற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள் — அதேபோல் ராணி மேரி கல்லூரியில் நடந்தது பற்றியும் — அதிலிருந்து மாணவிகளை பாடகிகளாக அறிமுகப்படுத்தியது பற்றியும் ஒரு செய்தி : // 9 மாணவிகளை பாடகிகளாக அறிமுகப்படுத்திய இளையராஜா // https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26049841.ece ராஜா — ராஜாதான் … தூள் கிளப்புகிறார் ராஜா …. !!!
ராஜா சார் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, தன்னை மிகவும் பாதித்த பாடல் என்று, விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையமைப்பில் வெளிவந்த “மாலைப்பொழுதின் மயக்கத்திலே” பாடலைப்பற்றி கூறி இருக்கிறார்.
நானும், கிட்டத்தட்ட ராஜா சாரின் வயது தான்.
அதே போல், அவரை – எதிர்காலத்தைப்பற்றி சிந்தித்து, திகைக்க வைத்த அதே உணர்ச்சிகள், எனக்கும் கிட்டத்தட்ட அதே 14-15 வயதில் ஏற்பட்டது. அந்த சமயத்தில் எங்கள் குடும்பம் நிலை தடுமாறி திண்டாடிக்கொண்டிருந்தது. நிகழ்காலத்தில் நிலையான படிப்போ, வாழ்க்கையோ இல்லாத நிலை…… எதிர்காலம் என்ன ஆகும் என்கிற திகைப்பும், கவலையும் வேறு …
அப்போது இந்த பாடல் எனக்கு மனப்பாடம்….
” இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம் –
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம் ”
என்கிற வார்த்தைகள், வர்ணிக்க முடியாத உணர்வுகளை அந்த வயதில் என் மனதில் ஏற்படுத்தின.
கவிஞர் கண்ணதாசனைப்போன்று – மனித வாழ்க்கையின் நிஜ உணர்வுகளையும், அனுபவங்களையும் பிரதிபலிக்கும் பாடல்களை என் இத்தனை வயதில் வேறு எந்த கவிஞர்களிடமும் காணமுடியவில்லை….
ராஜா சார் கூறுவது சத்தியமான வார்த்தை… உண்மை அனுபவம்…
-காவிரிமைந்தன்
உண்மை. கவிஞர் கண்ணதாசனும், இசைஞானி இளையராஜா அவர்களும்
நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். அனைத்தையும் பதிவு செய்து வைக்கக்கூடிய
டெக்னாலஜி கிடைத்தது நமது அதிர்ஷ்டம்.
காலம் காலத்துக்கும் மறக்க முடியாதவை இவர்களின் படைப்புகள்.