நேற்றிரவு எழுதிய கட்டுரை ( இதென்ன – அதிகார முறைகேட்டிற்கு
கிடைத்த பரிசா…?) – எழுதும்போதே என்னை மிகவும் பாதித்தது…. நம் சமூகத்தின் இயலாமை குறித்து மிகவும் கோபமும், வருத்தமும் கொள்ள வைத்தது…..
அதையொட்டி எழுந்தது தான் இந்த இடுகை…
இதன் சில பகுதிகள் ஏற்கெனவே இந்த தளத்தில் வெளிவந்திருக்கின்றன….
———————-
நாம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டியவை இந்த புகைப்படங்கள்….
இது இந்தியா தான் …இவர்கள் அனைவரும் நம் மக்கள் தான் ….
ஆனால் அவர்கள் கதியைப் பாருங்கள்.
சேற்றில் உழலும் பன்றிகள் கூட புழங்கத் தயங்கும் இடங்களில்
இந்த மக்கள், நம் சகோதரர்கள் – குடியிருக்கிறார்கள்.
நம்மில் ஏறக்குறைய 22 சதவீதம் ( 2017-ஆம் ஆண்டு கணக்குப்படி,
21.9 % ) மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள். அவர்களில்
பெரும்பான்மையோர் –
தங்கள் குழந்தை குட்டிகளுடன் -இத்தகைய இடங்களில் தான் வசிக்கிறார்கள்.
நேற்றிரவு பதிவுசெய்த இடுகையில் குறிப்பிடப்பட்டிருந்த திருமதி இந்த நாட்டிற்கும், பாஜக அரசுக்கு நெருக்கமான சில தொழிலதிபர்களுக்கும் செய்த பணிகள் பற்றி ஏற்கெனவே சில கட்டுரைகள் இந்த தளத்தில் வெளிவந்திருக்கின்றன….
நண்பர்கள் அவற்றை காண்பது, இவரைப்பற்றிய மதிப்பீட்டிற்கு உதவும்…
1) ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல் ….
2) அடானியின் சுரங்கத்திற்கு 6200 கோடி “லோன்” – விழித்துக்கொண்டது வங்கி ….
————————————————————–
இந்த இடுகை மேலும் – பகுதி-2-ல் தொடர்கிறது….
.
——————————————————————————-






















படங்கள் என்னவோ செய்கின்றன .
குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது.
நாம் என்ன செய்யலாம் சொல்லுங்களேன் சார்.
Really, Feeling very much handicapped.
Imparity is so high in this nation. Even in US, there are homeless but they get shelter at community center.
OMG, the kids at these photos are innocent. they must be given proper food, shelter and education for their good future.