…
…

…
குறை சொல்பவர்கள் பைத்தியக்காரர்கள் என்று மட்டும் தான்
இன்னமும் சொல்லவில்லை….
மாற்றி மாற்றி அடித்துச் சொல்கின்றன மத்திய அரசும் மாநில அரசும்-
GST வரி மாற்றத்தால், எந்த வணிக நிறுவனத்திற்கும் எந்தவித
நஷ்டமோ, துன்பமோ கிடையாது என்று….
GST வரிவிதிப்பின் காரணமாக திருப்பூர் பின்னலாடை
தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் எத்தகைய இன்னல்களை
சந்திக்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது இந்த காணோளிச் செய்தி .
இதையும் இட்டுக்கட்டிய கட்டுக்கதை என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில்,
இந்த செய்தியை சொல்வது ரிலையன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த
செய்தி தொலைக்காட்சியே தான்
மந்திரிகளுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால், உடனடியாக இதில் தலையிட்டு நல்லது செய்ய வேண்டும்.
…
…
———————————————————————————



தலைவர் ஜப்பானில் பிசி’யாக இருக்கிறார். வந்தவுடன் அவசியம் கவனிப்பார் சார்.
KM Sir you are right. 2 years back we used to see plenty bed spreads, pillow cases, comforters, towels…….like this items from INDIA. But now it is very rare to find Made in India. Most of these items are now from Pakistan. Very sad.
அய்யா …! ஜி.எஸ்.டி வரலாறு கூறுவது ..!
இரண்டு ஆண்டுகளில் 918. தீர்மானங்கள்எடுத்திருக்கிறார்கள்… 30. கூட்டங்களில் விவாதித்து இருக்கிறார்கள் …விரிவான நிகழ்ச்சி நிரல் குறிப்புகள் 4730 பக்கங்களை தாணடிவிட்டது என்று செய்திவந்துள்ளது …https://minnambalam.com/k/2018/10/29/12 …. இவ்வளவு விவாதங்களில் கூட இந்த திருப்பூரை பற்றி பேசாமலா இருந்திருப்பார்கள் … ? திருப்பூர் மட்டும் எத்தியாேப்பியா ஆனால் பாேதுமா …?
GST is not only having impact on the major industries, but even on individual small business. One of my friend was having a small ice cream parlour (Arun Ice cream dealer) and he lost heavily after GST was introduced resulting in forced to close the shop. How far its true, i cannot vouch, but he keeps on mentioning that GST has ruined his business.
நீங்கள் கூறியுள்ளது உண்மைதான் ராமன். நம்ம நாட்டில் கணக்கு காண்பிப்பது என்பது மிகவும் குறைவு. அதனால் ஜி.எஸ்.டி என்பது நேர்மறையாக இல்லாமல் மறைமுகமாக வரிகளை அதிகப்படுத்திவிட்டது. பிஸினெஸ்மென் தங்கள் லாபத்தில் குறைவில்லாமல், அதற்கு அதிகமாக வரிகளை மக்களிடமிருந்து வாங்குவதால் பொருட்கள் விலையேறியிருக்கின்றன. மொத்தத்தில் வரிகள் அதிகம், அதனால் மக்களுக்கு-வரிகள் செலுத்துபவர்களுக்கு ஒரு பயனும் இல்லை என்பதுதான் நாட்டு நிலைமை.