…
…
ஒரு நல்ல செய்தியை பார்த்தேன்… பகிர்ந்து கொள்கிறேன்.
———————

…
இங்கு, நெல், பயிறுவகைகள், முளைக்கட்டிய தானியங்கள்,
சிறுதானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் என 2000-க்கும்
மேற்பட்ட பாரம்பர்ய விதைகள் காட்சிக்காக வைக்கப்பட
உள்ளன.
விழாவில் குழந்தைகளுக்கான நிகழ்வுகள், செயல்முறைப் பயிற்சிகள், பாரம்பர்ய உணவு, தோட்டக்கலை மற்றும் பல்வகை அங்காடிகள் மற்றும் விதைப் பரிமாற்றம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மேலும், சமூக விதை வங்கிகள், விதை சேகரிப்பாளர்கள், 100 விதை வர்த்தகர்கள், இயற்கை வேளாண்மை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
——————————————————–
இது தனி –
இந்த சமயத்தில் அண்மையில் – ” விதைப்பந்து” மூலம்
காலி நிலங்களில் அதிக அளவில் மரம் வளர்ப்பதைப் பற்றிய
ஒரு விழிப்புணர்வு – வீடியோவை பார்த்தேன்.
சுவாரஸ்யமான, உபயோகமான அந்த வீடியோ கீழே –
( விதைப்பந்து என்பது…மண் மற்றும் பசுஞ்சாணத்தால் ஆன
உருண்டை. இதனுள் பயன்தரும் மரங்களின் விதைகளை
பொதிந்து உருவாக்கிய பந்து…
விதைகளை சேகரித்து ,அதை பாதுகாத்து அதனை இயற்கை
எறிகுண்டுகளாக பரவலாக்கிய மிகவும் தொன்மையான எகிப்திய நாட்டு விவசாய முறையாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஜப்பான் நாட்டில்
விளைநிலங்களைத் தவிர்த்து எரிமலை சாம்பல்
படிந்தபகுதியில் விதைப்பந்துகளை வானிலிருந்து தூவியே
காடுகளை உருவாக்கினர். )
…



There is a hope that in spite of our choice for corrupt and inefficient governments we got, Every one need to support them and contribute to the betterment of the society.
எத்தகைய நல்ல உள்ளங்கள் நாட்டில் இருக்கின்றன. பயன் கருதாப் பணி. இவர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள். மிக நல்ல பகிர்வு. பாராட்டுகள்.
Sorry.no video in my page
wonderful idea – hope it takes off in a big way .