அய்யோ பாவம் விஜயபாஸ்கருக்கு இந்த மாதிரி வித்தை தெரிந்திருந்தால் தப்பி இருப்பாரோ…?

ஒரு வேளை திருவாளர் விஜயபாஸ்கர்-க்கு
இந்த மாதிரி வித்தை தெரிந்திருந்தால்
தப்பி இருப்பாரோ …? 🙂 🙂 🙂

https://youtu.be/YwDWF7QUj2Q

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அய்யோ பாவம் விஜயபாஸ்கருக்கு இந்த மாதிரி வித்தை தெரிந்திருந்தால் தப்பி இருப்பாரோ…?

  1. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! // இந்த மாதிரி வித்தை // விஜயபாஸ்கருக்கு மட்டும் தானா …? தேர்தல் நல்ல தேர்தல் … ? மக்களுக்கு வாரி வழங்கும் ஆர்.கே. நகர் தேர்தல் … // ஆனால் விகடனில் ஒரு செய்தி :–

    // அண்ணா சந்தித்த முதல் தேர்தலும்… அண்ணா வழி வந்தவர்களின் ஆர்.கே.நகர் தேர்தலும்! // http://www.vikatan.com/news/coverstory/85738-annas-first-election-and-anna-followers-rknagar-election.html?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=10239 செய்தியில் கடைசியாக :
    // “இந்தத் தொகுதிக்கு இந்த 2 வருஷத்துல நடக்குற மூணாவது தேர்தல் இது. அதுபோக பல தேர்தல்களைப் பாத்துட்டோம். ஆனா தொகுதிக்கு எதுவும் யாரும் செய்யலை. இனி ஜெயிக்கறவங்களும் செய்யப்போறதில்லை. எப்படியும் யாராவது ஒருத்தர் ஜெயிச்சு பணம் சம்பாதிக்கப் போறார். நமக்கு எதுவும் பண்ணப்போறதில்லை. கிடைக்கற வரைக்கும் லாபம்னு இப்போ கொடுக்கறதை வாங்கிக்க வேண்டியது தான்” என நம்மிடம் சிலர் சொல்ல அதிர்ந்து போய் நின்றோம்……
    உண்மையான ஜனநாயகத்தை விடுத்து, நாம் பணநாயகத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதற்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக காட்சியளிக்கிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். உண்மையான ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை என்று உணரப்போகிறோம் நாம்? .// மக்களின் மன நிலை – மாற்றம் திரு மங்கலத்தில் ஆரம்பித்து வைத்தது இன்று வரை தொடர்கிறது ….

    ஊழல் — லஞ்சம் — கொள்ளை என்பதற்கு பிள்ளையார் சுழிபோட்டு ஆரம்பித்து வைத்த புண்ணியவானின் ” ராசியான கைக்கு ” கணையாழி போடுவதா … காப்பு போடுவதா ..? என்பதைப் பற்றி சிந்திக்க திராணியில்லாமல் — கொடுப்பதை வாங்கிக்கொள்ளும் மக்கள் — ” நல்ல ஜன நாயகம் ” … ! கடுகளவு ரெய்டில் மாட்டும் — மலையளவு தப்பித்து விடும் — ” ரெய்டு — கைது — ஜாமீன் — ஜாலி ” என்பது தான் வாடிக்கையான ஒன்று — இன்றைய பரபரப்பு — பிறகு பிசுபிசுப்பு …?

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை.சார் – பகிர்வை ரசித்தேன். ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டே’ – RAIDக்கு வரும் ஆபீசர்கள் மட்டும் BRILLIANTஆக இருக்க மாட்டார்களா? (இன்னொண்ணு.. ஒரு தடவை RAID பண்ணியாச்சுனா, அடுத்த 1-2 வருடத்துக்கு RAID பண்ணமாட்டார்களாமே.. அதனால் இவங்களே CLEAN ஆ இருக்கும்போது RAID ஏற்பாடு பண்ணும் நடவடிக்கைகளில் இறங்குவார்களாமே)

    இதைவிட சுலபமாக, யார் யாருடைய உறவினர்கள் (பெரும்பாலும் பசங்க) துபாய் அல்லது மொரீஷியஸ் போறாங்களோ, அவங்கள்லாம் கருப்புப் பணம் பதுக்கறவங்க என்று எளிதாப் புரிஞ்சுக்கலாம் (விஜயகாந்த் மச்சான், சரத்குமார், துரைமுருகன், ஸ்டாலின் குடும்பம் போன்ற பலர்)

    விகடன் பாவம்… ஆர்.கே நகர் மட்டும்தான் அவங்களுக்கு கண்ணுல படும். இந்த மாதிரி ORGANIZED CRIME (Sorry.. CRIMEக்கு பதிலா DISTRIBUTION) ஆரம்பித்துவைத்தது முக அழகிரி மற்றும் அதை ஆதரித்து சிலாகித்த மு.கருணானிதிதான். திருமங்கலம் தேர்தலின்போது, எப்படி எல்லா வாக்காளரையும் தொகுதிக்கு வரவைத்து, திமுகவுக்கு வாக்களிக்க வைத்தார்கள், கருணானிதி ஆட்சியில் இருந்தபோது என்று எல்லோருக்கும் தெரியும். அப்போது, எல்லா வாக்காளர்களுக்கும், ஆளுக்கு 500 ரூ வீதம் வீட்டிற்கு அளிக்கப்பட்டது (வீசி எறியப்பட்டது). வெளி ஊருக்குப் போனவர்களைக் கண்டுபிடித்து, அவர்களும் தேர்தலின்போது ஊருக்கு வந்து வாக்களிக்குமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எந்த CRIMEம் வளர்வதுதானே இயல்பு (மாட்டிக்காம செய்வதில் வளர்ச்சி). எப்போது பங்குகளை மாறனுக்கு விற்றார்களோ, எப்போது விகடன் டிவி, சன் தொலைக்காட்சியை சார்ந்திருக்கவேண்டிய தேவை ஏற்பட்டதோ, அப்போதே விகடன் குழுமம் திமுக கரை வேட்டியை உடுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது. வியாபாரத்தில் நடு நிலையாவது ஒண்ணாவது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.