….
….
மிகுந்த கட்டுப்பாடுடனும், கண்ணியத்துடனும்
போராட்டம் நடத்தி –
போலீஸ் கமிஷனருடன் கைகோத்து,
புன்னகையுடனும், உரிய மரியாதையுடனும் –
அவர் போராட்டக்காரர்களூடே நிதானமாக நடந்து செல்லவும் –
வழி வகுத்துக் கொடுத்த இவர்கள் தான்
உண்மையான தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் – போராட்டக்காரர்கள்….பாராட்டுக்கு உரியவர்கள்….
https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FChennai.Police%2Fvideos%2F1230341383719216%2F&show_text=0&width=560
——————————————————–
ஆனால், இவர்கள்….?????????????????????
அந்த கட்டுப்பாடும், கண்ணியமும் மிக்க போராட்டவாதிகள்
தங்கள் வெற்றியின் பலனை அனுவிக்க விடாமல்,
இளைஞர்கள் சந்தோஷமாக,
கொண்டாட்டத்துடன் –
வீடு திரும்புவதை விரும்பாமல்,
அந்த புகழ் அவர்களுக்கு கிடைத்து விடாமல் –
திட்டம் போட்டு சீர்குலைத்த –
காலிகள், ரவுடிகள், அரசியல்வாதிகளின் கூலிப்படைகள் –
இவர்கள் செய்த அட்டூழியங்களை பெரும்பாலான மீடியாக்கள் காட்ட மறுக்கின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஒவ்வொரு அரசியல்கட்சியின், தொழிலதிபரின் பிடியிலும், செல்வாக்கிலும்
இருப்பதால்….
கீழே காணும் வீடியோக்களில், கலவரங்களில் ஈடுபட்டவர்கள்
யார், போராட்ட இளைஞர்களுக்கும் இவர்களுக்கும் என்ன
சம்பந்தம்…
இந்த பொறுக்கிகள் எப்படி “மறவழி”யில்
ஈடுபட்டார்கள் என்பதை எல்லாம் –
முக்கியமான தொலைக்காட்சிகள் கண்களில் படாத
இந்த வீடியோக்களில் பார்ப்போமே…!!!
——————
https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FChennai.Police%2Fvideos%2F1234558666630821%2F&show_text=0&width=400
——————–
https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FChennai.Police%2Fvideos%2F1233592646727423%2F&show_text=0&width=560
——————–
https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FChennai.Police%2Fvideos%2F1234532969966724%2F&show_text=0&width=560
—————
….
https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FChennai.Police%2Fvideos%2F1234551333298221%2F&show_text=0&width=560
….
https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FChennai.Police%2Fvideos%2F1234539066632781%2F&show_text=0&width=560
————
https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FChennai.Police%2Fvideos%2F1234518739968147%2F&show_text=0&width=560
—————-
https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FChennai.Police%2Fvideos%2F1233596193393735%2F&show_text=0&width=560
————–
https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FChennai.Police%2Fvideos%2F1233589433394411%2F&show_text=0&width=560
—————–
ரவுடிகளால் தாக்கப்பட்டு, ரத்தம் சொட்ட சொட்ட
மருத்துவமனையில் கிடக்கும் காவல்காரர் பேசுகிறார்…
https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FChennai.Police%2Fvideos%2F1233541796732508%2F&show_text=0&width=560
—————
About vimarisanam - kavirimainthan
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
ஐயா
போராட்டத்துலே திமுக கருப்பாடு புகுந்திடுச்சு
அதிமுக வெள்ளாடு புகுந்திடுச்சு
பின் லேடன் செம்மறி ஆடு புகுந்துடுச்சு
போலீஸ் சீருடையில் குளோனிங் ஆடும் புகுந்துடுச்சு
எல்லாம் ஓகேதான்!
கடைசி நேரத்தில், போராடிய அனைத்து மாணவர்களும் கலைந்துவிட்டனர். தீவிரவாத குழுக்களை சேர்ந்த 1500 பேர்கள் மட்டுமே அனைத்துவிதமான வன்முறைகளுக்கும் காரணமானவர்கள் என்பது காவல்துறையினர் கூற்று.
அப்போதுதான் 7000 போலீஸார்கள் அவ்விடத்தில் இருந்தனரே! அவர்களால் ஏன் அந்த 1500 பேரை கட்டுபடுத்த முடியவில்லை?
ஆறேழு நாட்களாக நடைபெற்ற வன்முறையற்ற போராட்டம் தோல்வியடைந்தால் தங்களுக்கு எந்த புண்ணியமுமில்லை என்று சிலரும்
இப்போராட்டம் வெற்றியடைந்தால் தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று சிலரும்
என்ன சொன்னாலும் மதிக்காமல் போராடிக்கொண்டிருப்பதால் ஏற்பட்ட ஈகோவால் உந்தப்பட்ட வேறுசிலரும்
இவ்வளவு பெரிய போராட்டம் ஏற்பட்டும் தங்களால் ஒரு கண்ணாடியையும் உடைக்க முடியவில்லை, ஒரு பொது சொத்தையும் சேதப்படுத்த முடியவில்லையே என்று ஆதங்கப்பட்ட மற்ற சிலரும்
இப்படி பல்வேறு முகங்களை பார்க்க முடிந்தது இந்த போராட்டத்தால்.
எல்லாவற்றிற்கும் மேலாக அரசின் தலைமைப்பண்பற்ற நிலை மிக முக்கிய காரணம் என்று கூறலாம். அதே போல காவல்துறையின் ஒழுங்கின்மை இதில் முக்கிய பங்காற்றியுள்ளது.
சீருடையில் பொதுசொத்தை தீவைக்கும்போது அவர்களை சுற்றி நின்ற காவலர்கள் அதை தடுக்க ஏன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க முன்வரவில்லை. இதை செய்தவர்கள்தான் ஏதோ ஒரு ஆட்டு மந்தைதானே! உடனடியாக தடுத்திருக்கலாமே? அனால் சிலபல மாணவர்களை அடித்து சின்னாபின்னமாக்கினார்களே, அதற்கு அவர்கள் யாரிடமிருந்து அனுமதி பெற்றார்கள்?
ஒண்ணுமே புரியவில்லை ஐயா!
ஒருத்தன் ட்ரம்ப்-பே தமிழக ஆட்சியை கலைப்பேன் என்று கூறியதாக சொல்கிறான்
இன்னொருத்தன் இதைபற்றி நாஸ்டர்டாமே தன்னுடைய புத்தகத்தில் பதிந்திருக்கிறார் என்கிறான்
வேறுவொருவனோ இதுக்கெல்லாம் காரணம் B2 பால்தான் என்கிறான்
அடுத்தவனோ இலுமினாட்டிகளின் தாண்டவம்தான் இது என்கிறான்
என்னமோ நடக்குது… மர்மமாய் இருக்குது…
எல்லோருமே திருடங்கத்தான்…. சொல்லப்போனால் குருடங்கதான்…
இன்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறும்…
நம்புவோம்!
do you want shooting by police ?
வன்முறையில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு கூட,
மெரினாவில் போராடிக்கொண்டிருந்தவர்களுடன்
சம்பந்தம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
இவர்கள், நீங்கள் சொன்னது போல் சமூக விரோதிகள்,
அரசியல்வியாதிகளின் கூலிப்படைகள்.
போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்களுக்கு
இப்போது நன்றாகவே தெரியும் கலவரங்களுக்கு
யார் காரணம் என்பது.
ஒரு நீதி விசாரணை நடப்பது உண்மையிலேயே நல்லது.
சில போலீஸ்காரர்களின் மீது தவறு இருப்பது
வெளி வந்தாலும் கூட, பல அரசியல்வியாதிகலின்
அசிங்கமான உண்மை முகங்கள் வெளியே தெரிய வரும்.
முதல்வர் தயங்காமல் நீதி விசாரணைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.
Sir, In my opinion the riots in front of American Embassy, at Ambur and Triplicane are similar in nature. Irrespective of religion, caste we all unite together to ensure such that things should not happen again .
http://www.vikatan.com/news/tamilnadu/78761-marina-protest-direct-evidence-of-betrayal.art
please see this article.
M.Syed,
மேலே BLOG -ல் இருக்கும் அத்தனை வீடியோக்களும்
சொல்லாத எதை வைத்து விகடன் என்னும் பச்சோந்தி
சொல்வதை நம்புகிறீர்கள்.
துவேஷத்தையும், வெறுப்பையும் மட்டுமே முதலீடு
செய்து வியாபாரம் செய்கிறது விகடன்.
அதன் மோசடி வேலைகளுக்கு நீங்களும் பலியாகாதீர்கள்.
M.Syed,
மேலே இருக்கும் வீடியோக்களுக்கு உங்கள் response என்ன ?
very disturbing videos –
அன்பின் காமைஜி,
எல்லா வீடியோக்களையும் சென்னை காவல்துறை வெளியிட்டிருக்கிறது.
மற்ற வீடியோக்களெல்லாம் கூட உண்மைதான். நம்பித்தான் ஆகவேண்டும்.
ஆனாலும் அந்த கடைசி வீடியோ, வாயில்தான் அடிபட்டுள்ளது என்பதைக்கூட மறந்துவிட்டு இவ்ளோ பேசமுடியுமா போலிஸ்கார்… வேண்டாம் விட்டுடுங்க.
போராட்டத்தை கைவிடுங்கன்னு சொல்லிப்பாருங்க, கேக்கலையா? சட்டப்படி நடவடிக்கை எடுக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. எடுக்கவும் செய்தீர்கள், அதைவிட்டுவிட்டு இப்படி ட்ராமாத்தனமாக லெக்சர் கொடுக்க.. சகிக்கலை.
———–
தலைப்புக்கு வருகிறேன்,
//main tv, media -க்களின் கண்களுக்கு புலப்படாத சில வீடியோக்கள்….!!!..// சென்னைமாநகர காவல்துறையே வெளியிட்டுள்ள இந்த வீடியோக்களை ஏன் அனைத்து மிடீயாக்களிலும் ஒளிபரப்ப துறைரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை.. அல்லது துறைரீதியாகக் கேட்டுக்கொண்டும் எந்த மீடியாவும் ஒளிபரப்ப முன்வரவில்லையா? ஒருவேளை இரண்டாவதுதான் காரணமென்றால், திமுக சார்பு மீடியாக்கள் ஒளிபரப்பாது என்றே வைத்துக்கொள்ளலாம்.. ஆனால் பாமக சார்பு, பாஜக சார்பு, அதிமுக சார்பு, மதிமுக சார்பு, ச்சை கட்சிப் பெயர் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது.. கேப்டன் சார்பு மீடியாக்கள் ஏன் இவற்றை ஒளிபரப்பவில்லை… அல்லது காவல்துறை இந்த விடீயோக்களை அவர்களிட்ம் ஒளிபரப்பும்படி கொடுக்கவில்லையா? கொடுத்தும் இவர்கள் ஒளிபரப்பமாட்டேன் என்று சொல்லிவிட்டார்களா?
நண்பர்களுக்கு நேரமிருப்பின் இதையும் கொஞ்சம் படிக்கலாம்.
நம் நண்பன்…
http://www.nisaptham.com/2017/01/blog-post_24.html
நண்ப டுடேஅண்ட்மீ,
விவரங்களை அலசி நியாயமாக யோசிக்கத் தெரிந்த நீங்கள் –
இந்த வழியில் தான் செல்வது என்று
முடிவெடுத்து விட்டீர்கள் என்றால் – பிறகு அதில் நான் சொல்வதற்கு
என்ன இருக்கிறது.
அது உங்கள் உரிமை… தாராளமாகச் செல்லுங்கள்…
all the best…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நன்றி ஜி.