.
.
பலர், மதம் தான் ஆன்மிகம் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். இது சரியா…?
அண்மையில் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு
71-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்
நடைபெற்றன. திரு.பாலகுமாரன் நீண்ட நாட்கள்
நல்ல உடல்நலத்தோடு வாழ்ந்து, தன் எழுத்துப்பணியை
தொடர வேண்டுவோம்.
எந்த கருத்தையும், அழகாகவும், விளக்கமாகவும்,
ஆணித்தரமாகவும் எடுத்துச் சொல்வதில்,
திரு.சுகி சிவம் அவர்களுக்கு ஈடு, இணை உண்டா…?
இந்த விழாவில் திரு.சுகி சிவம் அவர்கள்
மிகவும் குழப்பமான ஒரு விஷயத்தைப்பற்றி –
மிக அழகாக, தெளிவாகப் பேசினார்….
பலர் – மதம் தான் ஆன்மிகம் என்று தவறாகப்
புரிந்து கொண்டிருப்பதையும், செயல்படுவதையும்
மெலிதாகச் சாடினார்… ( கூர்ந்து நோக்கினால்,
இந்த உரையில் திரு.பாலகுமாரனுக்கும்
சேர்த்தே – சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார்
என்பது புரியும்….!!! )
சுகி சிவம் அவர்களின் உரை, இந்த விஷயங்களில்
ஈடுபாடு உள்ளவர்கள் அவசியம் கேட்க வேண்டிய
ஒன்று என்பதால் அதனை கீழே பதிந்திருக்கிறேன்.
பார்த்து விட்டு, உங்கள் கருத்துக்களையும்
பகிர்ந்து கொள்ளுங்களேன்.



just 120 years before…..awesome direction …no cg
……
……
சேஷன்,
என்ன நீங்கள் பாட்டிற்கு ஒரு
பெரிய, அரிய புதையலை
கொண்டு வந்து இங்கே போட்டு விட்டு,
சத்தம் போடாமல் நழுவி விட்டீர்களே….
இந்தப் புதையலுக்கு உரிய மரியாதை
கொடுக்க வேண்டுமே..!
தனியே இடுகை போட்டிருக்கிறேன்.
தலைப்பு –
“கபாலி” யின் கொள்ளுப்பாட்டன் –
1898-ஆம் ஆண்டின்
மௌனப்படங்களின் தொகுப்பு ……..!!!
உங்கள் ஆர்வத்திற்கு எனது
மனமார்ந்த நன்றிகள்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்