.
.
பார்க்க வேண்டும் என்கிற ஆசையும், ஆர்வமும், நேரமும்
இருந்தால் – யூட்யூப் தளத்தில் நேரம் போவதே தெரியாமல்
பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
எனக்கு ஆர்வமும் உண்டு; பல விஷயங்களில்
ரசனையும் அக்கரையும் உண்டு. ஆனால் நேரம் …..?
அது தான் பிரச்சினை.
எனவே, என் ரசனைக்கேற்ப சின்ன சின்ன விஷயங்கள்,
10-15 நிமிடங்களில் முடியக்கூடியதாக
எதாவது கிடைக்கிறதா என்று அலைந்து தேடிப்பார்த்து
அத்தோடு திருப்தி அடைந்து கொள்வேன்.
நேரப் பற்றாக்குறை – அதே சமயத்தில் நல்ல
விஷயம் கிடைத்தால் அவசியம் பார்க்க வேண்டும் என்று
என்னையொத்த நிலையில் இருப்பவர்களுக்கு இந்த தளம்
ஓரளவு உதவியாக இருக்கும்…!!!
வலைத்தளத்தில் – .இளையராஜா அவர்களின் நிகழ்ச்சிகள்
கொட்டிக்கிடக்கின்றன …
நான் ரசித்த, வித்தியாசமான, சின்னச் சின்ன
காட்சிகள் சில கீழே –
———————-
கடைசி ஒரு நிமிடத்தை அவசியம் பார்க்கவும் –
“சிம்பனி” என்றால் என்ன …?
“காற்றில் வரும் கீதமே” – பாடலை திரு.வாலியுடன்
சேர்ந்து இசையமைத்த விதம் –
only 3 notes –



கே.எம்.சார்,
நான்குமே நல்ல சாய்ஸ்.
தொடருங்கள்.
அன்னக்கிளியில் தென்றலாய் ஆரம்பித்து — தாரை தப்பட்டையில் ருத்ர தாண்டவம் வரை — இளையராஜா என்கிற மனிதனின் சாதனைகளை பட்டியல் போடுவது சிரமம் — 1000 – படங்கள் , 600- க்கு மேற்பட்ட தயாரிப்பாளர்கள் , 300 – க்கு மேற்பட்ட இயக்குனர்கள் , 200 – க்கு மேற்பட்ட பாடலாசிரியர்கள் , 400 – க்கு மேற்பட்ட பல மொழி பாடகர்கள் — நடிகர்கள் — நடிகைகள் ..! வாவ் … படு ஆச்சர்யம் அல்லவா … ? இன்றைய அவசர உலகில் அவரது பாடல்கள் நொடிக்கு – நொடி உலகம் முழுவதும் பலர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது — பெரிய அதிசய சாதனை அல்லவா … சிம்பொனி என்கிற வார்த்தையை நம் நாட்டில் பெரும்பாலானோர் ” அறிய ” வைத்தவர் இவர் தானே … ! இனி ஒரு தமிழன் இவ்வாறு தோன்றுவானா — ? நம்முடைய கவலைகளை மறந்து வாழ என்றும் மருந்தாக இருப்பது — இளையராஜாவின் இசை தானே …. ?
என்றும் ராஜா, இளையராஜா…
http://www.raajafm.com/index.html
Dear KM sir,
I was watching the below link – where raja was addressing a book fair meeting. Excellent speech. His thinking level is way beyond normal people. some of the concepts that he talks about like all the songs and tunes are already there and he is just an instrument to bring it to reality… etc.. are very good.
pranams
Srini
ஸ்ரீநி,
ராஜா “இசைஞானி” மட்டுமல்ல – “தத்துவஞானியும்” கூட.
நாம் கொடுத்து வைத்தவர்கள்… அத்தனையும் நமக்கு
கிடைக்கிறதே…! உங்கள் link-க்கு நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்