
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓரளவு குணமடைந்து
மீண்டும் செயல்படத் துவங்கி இருக்கிறார் துக்ளக்
ஆசிரியர் “சோ” அவர்கள்…!!!
இன்றைய தினம் வெளியாகியுள்ள துக்ளக் வார இதழில்
தன்னுடைய கேள்வி-பதிலைத் துவக்கியதன் மூலம்
தனது அடுத்த இன்னிங்ஸை துவக்கி இருக்கிறார்.
விரைவில் முழுவதுமாக குணமடையவும்,
நோய்த்தொல்லை மீண்டும் அவரை அணுகாமல் இருக்கவும்
மனப்பூர்வமாக வேண்டுவோம்.
“சோ” அவர்களுக்கு இந்த வலைத்தளத்தின் அனைத்து
நண்பர்களின் சார்பாகவும் வாழ்த்துக்கள்.
சோ அவர்களின் முதல் கேள்வி-பதில் கீழே –




ஓய்வுஎடுங்கள்! ஏழுமலையான் அருளால் நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டுகிறேன்!
எல்லாக் கட்சியினரும் (குறிப்பிடத்தக்க கட்சிகள்), சோ என்ன சொல்கிறார் என்று பார்ப்பார்கள். இதற்கு அவரது நடுனிலைமைதான் காரணம். அதுவும்தவிர எதிர்க்கருத்துக்கள் உள்ளவர்களை அவர் எதிரியாகப் பார்த்ததில்லை. அவர்களும் சோவை எதிரியாகப் பார்த்ததில்லை.
அவர் நலமடைந்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்தச் சந்தர்ப்பத்தில், “ஆசிரியர் பதில்களுக்கு” அவர் ஒரு சரியான வாரிசு கண்டுபிடித்தால் இன்னும் மகிழ்ச்சி.
Get well soon, GOD BLESS U.
For many of us, Cho has become one of our extended family, and is also like a friend, philosopher and guide.I pray for his complete recovery from illness soon.
ஆம் சந்திரமௌலி,
“சோ”வை என் மூத்த சகோதரர் என்று சொல்லும் அளவிற்கு
நேசிக்கிறேன். நான் பல தடவை அவருடன்
சண்டை போட்டிருக்கிறேன். திட்டி இருக்கிறேன்.
மூளையால் மட்டும் தான் யோசிக்கிறீர்கள்
இரக்கமோ, மனிதாபிமானமோ சற்றும் கிடையாது
என்றெல்லாம் பல விதங்களில் முரண் பட்டிருக்கிறேன்.
இருந்தாலும் அவரை மிகவும் நேசிக்கிறேன்.
மிக நேர்மையான மனிதர்…இந்த காலத்தில் வேறு யாரிடத்தும்
காண முடியாத அரிதான நேர்மை….!
இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தை அருளட்டும்…
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்