.
அற்புதமான பொக்கிஷம் ஒன்று கிடைத்தது …..
1850 -1900 ஆண்டுகளுக்கிடையே எடுக்கப்பட்ட
கருப்பு வெள்ளை புகைப்படங்கள்…!
இன்று வெளியாவது – சிராப்பள்ளி உச்சிப்பிள்ளையார்
கோவில். ஆம்… திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை
பிள்ளையாரைச் சுற்றியுள்ள இடங்கள் சுமார்
160 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கின்றன
பாருங்களேன் -எல்லாம் வெள்ளைக்காரர்கள்
எடுத்த புகைப்படங்கள் ….!!!
இது மட்டும், அண்மையில் எடுக்கப்பட்ட வண்ணப்படம் –
தாயுமானவ சுவாமி கோயிலை ஒட்டியுள்ள பல்லவர் குகை –
இது வடிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 580.
கீழே இருப்பது அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம்- சகிக்கவில்லை …. அல்லவா …!!!










என்னிடம் நெறையவே இருக்கு ….இது போல் இதுக்கும் முற்காலத்தில்
பதிவிடுங்கள், நண்பரே…
நண்பர் விவேகா,
வலைத்தளம் வைத்திருக்கிறீர்களா ?
இல்லையென்றால் –
என் விலாசத்திற்கு அனுப்பி வையுங்களேன் –
( kavirimainthan@gmail.com ) –
இயன்றதை – உங்கள் பெயரைச் சொல்லி –
இங்கேயே பதிவிடுகிறேன்.
நண்பர்களும் பார்த்து மகிழட்டும்…!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அந்த கால புகைப்படங்கள் அருமை. இந்த புகைப்படங்களை பார்த்தவுடன் மனதில் தோன்றியது இதுதான், ” நல்ல வேளை கோயில் மலையை காப்பாற்றியது, இல்லையெனில் கிரானைட் ஆக கடல் கடந்திருக்கும்”.
நண்பர் புதுவசந்தம் அன்பு,
மிகச்சரியாகச் சொன்னீர்கள்….
பிற்காலத்தில் இப்படி நடக்குமென்று
நினைத்து தான், புத்திசாலித்தனமாக
பல குன்றுகளில் நம் முன்னோர்கள்
எதாவது ஒரு கோவிலைக் கட்டி விட்டனர்
போலிருக்கிறது …!!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நண்பர் புது வசந்தம் அவர்களுக்கு மிகவும் அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துகள் நண்பரே..
Reblogged this on rathnavelnatarajan and commented:
கருப்பு – வெள்ளை -பொக்கிஷங்கள் – ( பகுதி-1 ) அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்
பிங்குபாக்: கருப்பு – வெள்ளை -பொக்கிஷங்கள் – ( பகுதி-1 ) | Classic Tamil
நம் மூதாதையர்கள் எப்படியெல்லாம் நமக்கு இறைவன் தந்த கொடைகளை பாதுகாத்து பின் வரும் சந்ததிகளுக்கு தங்களால் இயன்றவரை கொடுத்து சென்றுள்ளார்கள். (ஏரிகளையும் குளங்களையும் விவசாய நிலங்களையும் ப்லாட் போட்டு விற்றாகிவிட்டது. நிலத்தடி நீரையும் காற்றையும் மாசுப்படுத்தியாச்சு)
அவர்களின் ஜீன்களில் வந்த நாம் மட்டும் ஏன் சுயநலவாதிகளாகி நம் பிள்ளைகளுக்கும் எதையும் விட்டுவைக்காமல் நாசமாக்குகிறோம். எங்கே மரபணுவில் மாற்றம் ஏற்பட்டது?
ஒரு புகைப்படம் நம்மில் எவ்வளவு மாற்றம் மற்றும் தாக்கம் ஏற்படுத்துகிறது!
நன்றி காமை ஐயா!
புகைப்படங்கள் வெளியிட்டமைக்கு நன்றி ஐயா.
http://www.bl.uk/search/og/search?q=trichinopoly&btnG.x=0&btnG.y=0&btnG=Go&spell=1&output=xml_no_dtd&proxystylesheet=public_onlinegallery&client=public_onlinegallery&ie=UTF-8&ulang=en&sort=date:D:L:d1&entqr=3&entqrm=0&wc=200&wc_mc=1&oe=UTF-8&ud=1&site=public_onlinegallery&ip=106.216.162.55&access=p&filter=0

மற்றும்
நன்றி நண்பரே.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மலைக்கோட்டையில் பாதி வரையில் தெருக்களை அமைத்து அங்கே ஏராளமான வீடுகள் இருக்கின்றன. தமிழர்களுக்கு ஸ்கில் போதாது என்று நினைக்கிறேன். மலையைக் குடைந்து வீடு கட்டிக்கொள்ளவில்லையே என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்.