ஒரு வார பயணமாக வடக்கே வந்திருக்கிறேன்.
நேற்று முன் தினம் டில்லி…
நேற்றும் இன்றும் ஹரித்வார். நாளை ரிஷிகேஷ்.
மாலையில் சூரியன் மறையும் வேளையில்
விளக்கு வைக்கும் நேரத்தில் இங்கே
கங்கை நதிக்கரையில் அமர்க்களப்படும்.
இங்கெல்லாம் இரவு ஏழரை மணிக்கு தான்
இருட்டுகிறது,
எக்கச்சக்கமாக யாத்ரிகர்கள் கூட்டம்.
விளக்கு வைக்கும் நேரத்தில், கங்கைக்கு பூசை
செய்து ஆரத்தி எடுப்பார்கள். அதே நேரத்தில்,
முன்னோர்களின் நினைவாக ஆற்றில் விளக்குகளை
மிதக்க விடுவார்கள். ஹரித்துவாரில்
பாய்ந்தோடும் கங்கை நீரில் விளக்குகள்
மிதந்து செல்வது கண்கொள்ளாக் காட்சி.
நான் கண்ட காட்சிகளை நீங்களும் காண
சில புகைப்படங்களை கீழே பதிவிட்டிருக்கிறேன்.






















அருமை!
நம்ம ஹரித்வார் கங்கை அனுபவம் இங்கே!
http://thulasidhalam.blogspot.co.nz/2011/02/blog-post_16.html
நண்பர் கோபால்,
அமர்க்களமாக, மிக நன்றாக இருக்கிறது உங்கள் அனுபவம்.
உங்கள் இடுகையை முன்னாலேயே பார்க்காமல் போய் விட்டேன்.
பார்த்திருந்தால், நான எழுதியதைக்கூட தவிர்த்திருப்பேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது:-) ஒவ்வொருவர் அனுபவமும் வெவ்வேறு அல்லவா? அனுபவங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை!
இப்போது துளசிதளத்தில் காசி, ப்ரயாக்(அலஹாபாத்) அயோத்யா போய்க்கொண்டிருக்கிறது. நேரம் இருந்தால் பாருங்கள்.
பதிவுகள் எழுதுவது நாந்தான். கோபாலின் மனைவி துளசி:-)
Varanasi visit unda?
நண்பர் ஸ்ரீநி,
போகலாமென்று தான் ….
ஆனால் ஒரு வருடமாவது போகட்டுமே ..
உமா பாரதி என்ன செய்கிறார் என்று
பார்க்கலாம் …..
வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அருமையான பதிவு.
நன்றி.