சுப்ரீம் கோர்ட்டில் -மத்திய அரசின் – “கச்சத்தீவை மீட்க முடியாது” என்கிற பதில் சட்டப்படியும் தவறே …

சுப்ரீம் கோர்ட்டில் -மத்திய அரசின் –
“கச்சத்தீவை மீட்க முடியாது” என்கிற பதில்
சட்டப்படியும் தவறே …

kachatheevu-1
இன்று வெளிவந்திருக்கும் ஒரு வரிச்செய்தி கீழே –

கச்சத்தீவை மீட்க முடியாது..
இலங்கை எல்லைக்குட்பட்டது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
பதில்!!

டெல்லி: இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க
முடியாது என்றும் அது இலங்கை எல்லைக்குட்பட்டது
என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பதில்
கூறியுள்ளது.

(http://tamil.oneindia.in/news/2013/08/30/ind
ia-centre-say-no-retrieve-katchatheevu-from-
sri-lanka-182395.html)

மத்திய அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
செய்யப்பட்டிருக்கும் பதில் மனுவின் விவரங்கள் இன்னும்
வெளியாகவில்லை. அது வெளியான பிறகு தான்
முழுத்தகவல்களும் கிடைக்கும்.

ஆனாலும், மத்திய அரசு இப்படி ஒரு நிலையை
எடுத்திருந்தால் – அது தமிழக மக்களுக்கு
இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என்பதோடு
மட்டுமல்லாமல், சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதும்
அல்ல.

வழக்கு விசாரணக்கு வரும்போது, வழக்கை
சுப்ரீம் கோர்ட்டிற்கு எடுத்துச்சென்றவர்கள் இதைவிட
திறமையாக வாதாடுவார்கள் என்கிற நம்பிக்கை
இருந்தாலும் – மனதில் ஏற்படும் ஆவேச உணர்ச்சிகளை
தணித்துக் கொள்வதற்காக, நம் பக்கத்தில் உள்ள
நியாயங்களை கீழே தருகிறேன்.

(இது ஏற்கெனவே விமரிசனம் வலைத்தளத்தில்
மார் 12, 2013 அன்று – வெளிவந்த
இடுகையின் ஒரு பகுதி –
“விளாம்பழத்து ஓடு அல்ல கச்சத்தீவு –
விட்டதடி உறவு என்று சொல்லி விடுவதற்கு !”)

—————-
“நான் இதை முற்றிலும் வேறான
கோணத்தில் பார்க்கிறேன்.
நம்பிக்கையுடன் பார்க்கிறேன்.
இன்றில்லா விட்டாலும் எதிர்காலத்தில் –
கச்சத்தீவும், மீனவர் பிரச்சினையும் நிச்சயமாகத்
தீர்க்கப்படக் கூடியவை தான்.

இரண்டு வழிகள் உண்டு.

– துணிச்சலான, தமிழகம் சொல்லும் நியாயத்தை உணர்ந்து,
ஏற்று, செயல்படக்கூடிய மத்திய அரசு இருந்தால் – 24 மணி
நேரத்தில் இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வரலாம்.
எப்படி ?

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் –
ஜூன் 28, 1974 அன்று கையொப்பமிடப்பட்ட
கச்சத்தீவு பற்றிய இந்திய-இலங்கை உடன்படிக்கை
பிரிவுகள் 5 மற்றும் 6ன் படி –

“பாரம்பரியமாக இரு நாட்டையும் சேர்ந்த
மீனவர்கள் அனுபவித்து வந்த எல்லா உரிமைகளையும்
அவர்கள் தொடர்ந்து, எந்தவித கட்டுப்பாடும் இன்றி
அனுபவிப்பார்கள். கச்சத்தீவு பகுதிக்கு அவர்களது
மீன்பிடி படகுகள் சென்று வர இலங்கை அரசிடமிருந்து
எந்தவித விசாவோ, அனுமதியோ தேவையிலை”
என்று கூறப்பட்டுள்ளது.

(Article 5 – Subject to the foregoing,
Indian fishermen and pilgrims will enjoy
access to visit Kachchativu as hitherto,
and
will not be required by Sri Lanka
to obtain travel documents or visas
for these purposes.

Article 6 -The vessels of Sri Lanka
and India will enjoy in each other’s waters
such rights as they have traditionally
enjoyed therein.)

கச்சத்தீவு உடன்படிக்கை பற்றிய அறிக்கையை இந்திய
பாராளுமன்றத்தில் வெளியிட்ட அப்போதைய வெளியுறவு
அமைச்சர் ஸ்வரண் சிங் கூட –

“மீனவர்கள் இதுவரை மீன்பிடித்து வந்த இடங்களில்
தொடர்ந்து தங்கள் தொழிலை செய்ய எந்த தடங்கலும்
இருக்காது” என்று உறுதி அளித்துள்ளார்.

உண்மை நிலை இவ்வாறு இருக்கையில் -நமது மீனவர்கள்
கச்சத்தீவு அருகே செல்வதோ, மீன் பிடிப்பதோ –
எல்லை தாண்டுவதாகும் என்று இலங்கை எப்படி முடிவு
செய்யலாம் ?

இந்திய அரசு காங்கிரஸ் தலைமையின்
சொந்த விருப்பங்களுக்கிணங்க, சும்மா இருப்பதால் தானே
இலங்கை வாலாட்டுகிறது. இதை அடக்க வழியா இல்லை ?

முதலில், இந்திய அரசு தன் கௌரவத்தையும்,
உரிமையையும் நிலை நாட்டவும், இந்திய(தமிழக ?)
மீனவர்கள் நலனை பாதுகாக்கவும் உறுதி எடுத்துக்
கொள்ள வேண்டும்.

கச்சத்தீவு ஒப்பந்தப்படியே, இந்திய மீனவர்களுக்கு
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க உரிமை இருக்கிறது
என்பதை மத்திய அரசு முதலில்
இலங்கையிடம் வெளிப்படையாக அறிவித்து,

இலங்கை கடற்படையினராலோ, மீனவராலோ
அங்கு வரும் தமிழக மீனவர்களுக்கு எந்த வித
அச்சுறுத்தலோ, துன்புறுத்தலோ – நிகழக் கூடாது
என்பதையும் வலியுறுத்திக் கூற வேண்டும்.

இந்த விதிகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு
இந்திய கடற்படைக்கு உத்திரவு இடப்பட்டுள்ளது
என்றும் இலங்கை கடற்படை விதிமீறினால்,
இந்தியக் கடற்படை பொறுத்துக் கொள்ளாது என்றும்
இலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இதை உறுதி செய்ய –
கச்சத்தீவு அருகே இந்திய கடலோர காவல்படையின்
கப்பல்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு, அங்கு
மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களின் பாதுகாப்பு
உறுதி செய்யப்பட வேண்டும்.

இதையும் மீறி இலங்கை கடற்படை தொந்திரவு
கொடுக்குமேயானால், கச்சத்தீவு பற்றிய ஒப்பந்த
விதிகளை இலங்கை மீறுவதை காரணம் காட்டியே,
இந்தியா இந்த ஒப்பந்தத்தை ஒரு தரப்பாக ரத்து செய்து
கச்சத்தீவை நிரந்தரமாகத் தன் பொறுப்பில்
ஏற்க வேண்டும்.

(ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படியே கூட,
இரு நாடுகளிடையே சில விதிகளுக்கு உட்பட்டு
ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு,

பிற்காலத்தில் எதாவது ஒரு தரப்பினர் அந்த
விதிமுறைகளின்படி நடக்கவோ, ஏற்கவோ மறுத்தால்,

அந்த காரணங்களுக்காகவே ஒப்பந்தத்தை ரத்து செய்யும்
உரிமை எதிர் தரப்பினருக்கு கிடைக்கிறது.)

அடுத்த வழி – நீதிமன்ற வழி !!

உச்சநீதிமன்றத்தில்( சுப்ரீம் கோர்ட் )
நீண்ட காலமாகத் தூங்கிக்கொண்டிருக்கும்
கச்சத்தீவு பற்றிய வழக்கை, தொடர்ந்து நிகழும் மீனவர்
படுகொலைகளை காரணம் காட்டி, அவசர வழக்காக
விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வைக்க வேண்டும்.

அடிப்படையிலேயே – இந்திய -இலங்கை அரசுகளால்
செய்து கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் சட்டரீதியாக
செல்லத்தக்கது அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்.

உண்மையில் கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லத்தக்கதா ?

இந்திய மண்ணில் ஒரு அங்குல நிலத்தைக் கூட
அண்டை அயல் நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க
வேண்டுமானால், எல்லைகளை மாற்ற அரசியல் சட்ட
திருத்தம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் ஏற்றுக்
கொள்ளப்பட வேண்டும்.

கச்சத்தீவு ஒப்பந்த விவகாரத்தில் –
இந்த நடைமுறை பின்பற்றப்படவே இல்லை !

சம்பந்தப்பட்ட மாநிலமான தமிழ் நாட்டையும்
கலந்து ஆலோசிக்காமல் –
பாராளுமன்றத்தின் அனுமதியையும் கோராமல் –
இந்தியப் பிரதமர் இந்திரா அம்மையார் தன்னிச்சையாக
இலங்கையுடன் ஜூன் 28, 1974 அன்று ஒப்பந்தத்தில்
கையெழுத்து போட்டு விட்டு –

பின்னர் பாராளுமன்றத்திற்கு அதனை ஒரு தகவலாக
மட்டுமே தந்தார்- அதையும் வெளியுறவுத் துறை அமைச்சராக
இருந்த ஸ்வரண் சிங்கின் ஒரு அறிக்கை மூலமாக.
முறைப்படி பாராளுமன்ற அங்கீகரிப்பிற்காக ஒப்பந்தம்
முன்வைக்கப்படவே இல்லை !

அதிமுக்கியமான விஷயம் –
இப்படி ஒரு ஒப்பந்தம் போடவே இந்திய அரசுக்கு
அதிகாரமோ, உரிமையோ இல்லை.

ஒப்பந்தத்தின் வாசகங்களே தவறானவை.
கச்சத்தீவு இரண்டு நாடுகளுக்கிடையே உள்ள
பிரச்சினைக்குரிய ஒரு பகுதியாக ஒப்பந்தத்தில்
சித்தரிக்கப்பட்டுள்ளது. அதுவே தவறு.

கச்சத்தீவு – எந்தவித சந்தேகத்திற்கும் இடம் இல்லாமல்,
ராமநாதபுரம் ஜமீனின் – இந்தியாவின் –
ஒரு பகுதியாகத்தான் இருந்தது என்பது
கீழே காணப்படும் விவரங்களிலிருந்து புரியும் –

In 1947 one Mr.Mohammed had taken lease
of the island of Katcha Theevu which was
registered in the Sub-Registrar’s office of

Indian town
of Rameswaram (Ref: Reg.No. 278/1948.)

After India attained independence,
the Indian State of Madras by way of

Government Order No: 2093 dated 11.8.1949

declared that Katcha Theevu as barren land

under Rameswaram revenue village
Survey Number: 1250 in an area of
285 acres and 20 cents.
Thus for centuries Katcha Theevu was
under the Princely state of Ramnad
in British India, and under Government of

Madras in Independent India.

இவ்வாறு சந்தேகத்திற்கே இடமில்லாமல், தமிழ் நாட்டின்
ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை –
அரசியல் சட்டப்படி அதற்குரிய அதிகாரம் இல்லாமலே
இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த அந்நாளைய
இந்திய அரசின் செயல் சட்ட விரோதமானது.

இந்த உண்மையை தகுந்த ஆதாரங்களுடன்,
சிறந்த வழக்கறிஞர்களின் துணையோடு நிச்சயமாக
உச்ச நீதி மன்றத்தில் நிரூபித்து, கச்சத்தீவு ஒப்பந்தத்தை
ரத்து செய்யும் ஆணையை உச்சநீதிமன்றத்திலிருந்து
பெற முடியும்.

எனவே -நிச்சயமாக, கச்சத்தீவு முடிந்து போன கதை அல்ல.
அதற்குரிய நேரமும்,அதனை செய்து முடிக்கத்தகுதியுள்ளவர்களும்
இன்னும் வரவில்லை – அவ்வளவே !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to சுப்ரீம் கோர்ட்டில் -மத்திய அரசின் – “கச்சத்தீவை மீட்க முடியாது” என்கிற பதில் சட்டப்படியும் தவறே …

  1. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    தமிழ்நாட்டின் நலனுக்கு என்று வரும் போது கட்சி வித்தியாசங்கள் இன்றி அனைவரும் ஒரே அணியில் முதலில் நிற்கும் பழக்கம் தமிழ்நாட்டில் என்று உருவாகின்றதோ அன்று தான் விடிவு காலம். மத்திய அரசை குறை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. இத்தாலி கேரளா மீனவர் பிரச்சனை என்ன நடந்தது? என்பதை யோசித்துப் பாருங்கள். ஆர்ப்பாட்டமின்றி உடனே முடிவுக்கு வந்தது.

  2. senthilkumar's avatar senthilkumar சொல்கிறார்:

    இப்படி தைரியமாக இந்தியா முடிவெடுக்க வேண்டும் என்றால் மோடி பிரதமர் ஆக வேண்டும்.

  3. ஜீன்ஸ்'s avatar ஜீன்ஸ் சொல்கிறார்:

    பல ஆண்டுகளுக்கு முன்னால் கட்ச தீவு பகுதியில் சுற்றி இருக்கின்றேன். இதனை இலங்கைக்கு தாரை வார்த்தபோது தமிழகத்தின் கருத்தினை கேட்கவில்லை. அப்போதைய ஆட்சியாளர்களுக்கும் இதில் பெரிதான அக்கறை இருக்கவில்லை!

    தொலைநோக்குப் பார்வை இல்லாத ஆட்சியாளர்களின் அதிக்க வெறிக்கு பால தமிழக மீனவர்கள் பலியாகியது தான் இதுவரை நாம் கண்டது.

    அழ்ந்த உள்நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரை! மிக்க நன்றி !

  4. இரா.வெங்கட்டரமணி's avatar இரா.வெங்கட்டரமணி சொல்கிறார்:

    கச்சத்தீவு பற்றிய உண்மை நிலை இன்னதென்று சொல்ல
    இந்திய அரசின் பதில் மனு பற்றி முழுமையான விவரங்கள்
    எல்லாம் தேவையில்லை.
    பல வழக்குகளில் வாதிக்காக அல்லது பிரதிவாதிக்க்காக
    ஆஜாராகும் வழக்குரைஞர், வழக்கின் போக்குக்குத் தக்கவாறும்
    எதிர்தரப்பின் போக்குக்குத் தக்கவாறும் தனது “போக்கை”
    மாற்றியமைத்து வாதங்களை வைப்பது வாடிக்கைதான்.
    நீதிமன்ற அனுபவங்களும் சட்ட அறிவுமுடைய தாங்களும்
    இதை அறிவீர்கள்.
    இந்தியாவுக்கு சொந்தமென்று அழுத்தம் திருத்தமாக ஓட்டைகள்
    ஏதுமின்றி உரிமை கோருவோர் தங்களது வாதத்தை முன்னிறுத்தி
    வாதிட்டால், அதற்கொப்ப தங்களது ஆட்சேபனையை அல்லது
    மறுப்பை வைக்க வாய்ப்பிருக்கிறது. பெயருக்கு ஒரு மனுவை
    தாக்கல் செய்து, “உரிய” வழக்கறிஞரை வைத்து வாதத்தை
    செய்யாதவரை பிரதிவாதம் இப்படி பயங்கரமாகத் தானிருக்கும்.
    மோடி பிரதமராக வந்தால், மறுநாள் காலை கச்சத்தீவு ஒப்பந்தம்
    ரத்தாகிவிடுமென்பதெல்லாம் பகல் கனவல்ல். ஞாயிறு
    பிரியானிக்குப் பின் வந்த தூக்கத்தில் வரும் நன்பகல் கனவு.

    தமிழகத்திலுள்ள அறுபடை வீடுகளிலும், திருப்பதியிலும் இன்ன பிற
    பிரசித்திப் பெற்ற தலங்களிலும் “டாலர்கள்” தங்குதடையின்றி
    கிடைப்பதாக நண்பர்கள் சொல்லுகிறார்கள்.

  5. இரா.வெங்கட்டரமணி's avatar இரா.வெங்கட்டரமணி சொல்கிறார்:

    கச்சத்தீவு வழக்கில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவிற்கு மத்திய
    அரசு தாக்கல் செய்த பதில் மனு கிடக்கட்டும் விடுங்கள். வெளியுறவு
    அமைச்சகம் திமுக சார்பில் முயற்சிக்கப்பட்ட “விவாதத்தையே”
    எதிர்த்திருக்கிறது.
    சொல்லப்பட்ட காரணம்: “கச்சத்தீவை இலங்கையின் எல்லைக்கு
    உட்பட்டப் பகுதியாக இந்தியா 1974 அங்கீகரித்தாகிவிட்டது.
    திமுக முயற்சிக்கும் விவாதம் விரும்பத் தக்கதல்ல. நமது பக்கத்து
    நாடானதும் நட்பு நாடனதுமான இலங்கையுடனான உறவுக்கு குந்தகம்
    விளைவிக்கலாம். என்பதுதான்.
    வெளியுறவு அமைச்சகத்தின் இந்த விளக்கம் பாராளுமன்ற
    சபாநாயகருக்கு உரிய வகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மழைக்கால
    கூட்டத் தொடரில், கச்சத்தீவு குறித்து குறுகிய கால விவாதம் நடத்த
    விதி எண் 193 கீழ் திமுக விண்ணப்பத்திருந்தது.
    திமுக உறுப்பினர் திரு.TKS இளங்கோவன் விவாதம் வேண்டி செயத
    தாக்கீதில், கச்சத்தீவு ச்ட்டபபடி செல்லாது என்றும் பாராளுமன்றமும்
    இந்திய அரசும் ”உரிய வகையில்” கச்சத்தீவு அதிகார மாற்றத்திற்கு
    ஒப்புதல் வழங்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்..
    சுப்ரீம் கோர்ட் “நியாயத்தை” நிலை நிறுத்தும் என்பது தமிழினத் தலைவர்
    கலைஞரின் எதிர்பார்ப்பு.

  6. AAR's avatar AAR சொல்கிறார்:

    If India can give away Kachateevu to Lanka why not give away Kashmir to Pakistan and Arunachal Pradesh and Sikkim to China. Useless Tamilnadu politicians were they sleeping when Kachateevu was given away?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.