(இப்போதைக்கு) இந்த வருடத்தின்
மிகச் சிறந்த “ஜோக்” !
“லோக்பால்” பற்றி அனைத்துக் கட்சிகளின்
கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக –
இன்று அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங்கை
சந்தித்த சிபிஐ டைரக்டர் ஏ.பீ.சிங் –
சிபிஐ தற்போது சுதந்திரமாகப் பணியாற்றி
வருகிறது என்றும்
சிபிஐ லோக்பால் அமைப்பின் கீழ் வந்தால்
அதன் சுதந்திரம் பறிபோய் விடும்
எனவே அதனை தான் விரும்பவில்லை
என்றும் சொல்லி விட்டு வந்தார் !
இதற்கு கொஞ்சம் முன்னதாக பிரதமரை சந்தித்த
மத்திய விஜிலன்ஸ் கமிஷனின் டைரக்டர்
பிரதீப் குமாரும் இதே போன்ற கருத்தைச் சொல்லி
விட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பின்குறிப்பு – இந்த செய்தியை இன்று வெளியிட்டுள்ள
பிடிஐ நிறுவனம் இந்த இரண்டு பேரும் எப்போது
சோனியா காந்தியை சந்தித்து, இப்படிச் சொல்வதற்கான
உத்திரவைப் பெற்றார்கள் என்கிற செய்திய
மட்டும் சொல்லாமல் விட்டு விட்டது.




இறைவா –
நீ மிகப் பெரியவன் –
பரந்த மனது கொண்டவன் !
தாங்கள் என்ன செய்கிறோம்
என்பதை நன்கு அறிந்தே செய்யும்
இந்த “அடிமைகளை”
மன்னித்து விட்டு விடு.
இதற்காக,
அவர்கள் “அனுபவிக்க”வேண்டியதை
இங்கேயே நிச்சயம் அனுபவித்து விடுவார்கள்.
சரிதான் ..சொல்லாம இருப்பது அவங்க சுதந்திரமோ என்னவோ ?