கள்ள சாராயத்தால் செத்தவர்களுக்கு 10 லட்சம் – மாரிதாஸ் கூறும் அந்த 4 சாராய ஆலைகளால் செத்தவர்களுக்கு …???

.

……………………………………….

கீழே – மாரிதாஸ் காணொலியில் சொல்லும் கோவன் நாய் …..!!!

கம்யூனிஸ்டாம் ஆனால் -கருப்பு சிவப்பு ஆடை … !!! எல்லாரும் இந்த நாயை நன்றாக பார்க்க வேண்டும் என்பதால் தான் புகைப்படம் பெரியதாக …!!!

………..

……………………………………………………

கோவனை தேடியவர்களுக்கு – இதோ வந்துட்டார் இந்த முறை கோவணமாக-

மாரிதாஸ் காணொலி ….

……………

.
…………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to கள்ள சாராயத்தால் செத்தவர்களுக்கு 10 லட்சம் – மாரிதாஸ் கூறும் அந்த 4 சாராய ஆலைகளால் செத்தவர்களுக்கு …???

  1. புதியவன் சொல்கிறார்:

    சாதாரண பார்வையாளர்களான நம் பார்வையில்தான் கோளாறு. நாம் அப்பாவி என்று நாமே நம்மைப்பற்றி நினைத்துக்கொண்டு, ஊடகங்கள், இணைய பத்திரிகைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பத்திரிகையாளர்கள் பெரும்பாலானவர்கள், அரசியல் தலைவர்கள் கோவாலசாமி, திருமா, கனிமொழி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் போன்றவர்கள், சமூகத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் என்ற போர்வையில் வரும் மின்னம்பலம் ஜெயரஞ்சன், திருமுருகன் காந்தி, உதயகுமார், கோவன் போன்றவர்கள், ஏதோ நாட்டின் நன்மைக்காகத்தான் செய்திகள், விவாதங்கள் செய்கிறார்கள், நமக்காகப் பாடுபடுகிறார்கள் என்று நினைத்துக்கொள்கிறோம். அவர்கள் அனைவரும் திமுகவிடம் காசு வாங்கிக்கொண்டு அல்லது திமுகவிற்காகக் குரல் கொடுப்பவர்கள், அவர்களுக்கு தமிழகத்தின் நலனிலோ இல்லை தமிழர்களின் நலத்திலோ கிஞ்சித்தும் அக்கறை கிடையாது. அவர்களின் ஒரே அஜெண்டா, தங்களுக்கு காசு தருபவர்களுக்கு விசுவாசமாக இருந்து போராட்டங்கள் நடத்துவது. பூனை முகமூடி போட்டுக்கொண்டிருக்கும் கழுதைப்புலிகளை, பூனைகள் என்று நம்புவது நம்முடைய தவறு.

    கா.மை. சார் மற்றும் மாரிதாஸ் அவர்களும் அப்பாவிகள் என்றே எனக்குத் தோன்றுகிறது. 16 வயதினிலே படம் பார்த்துவிட்டு, பாவம் ரஜினி… சிறைக்கெல்லாம் போயிட்டு வந்திருப்பார், எவ்வளவு கஷ்டப்படுகிறாரோ என்று வருத்தப்பட்டு அவருடைய உணவுக்காக தூக்குச்சட்டியில் கஞ்சியை எடுத்துப்போகும் அளவு அப்பாவிகள் போலிருக்கு. கோவன், ஜெயரஞ்சன், திருமுருகன் காந்தி, கோவாலசாமி, உதயகுமார், கனிமொழி போன்றவர்கள் அவர்களுக்குக் கொடுத்த வேடத்தை நன்றாகச் செய்து, நம் முன்னால் நடித்தார்கள். அதைப் பார்த்துவிட்டு, ஐயோ..இவர்கள் நம் நலனுக்காக இவ்வளவு பாடுபடுகிறார்களே, திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே டாஸ்மாக் மூடப்படும், மக்கள் எல்லோரும் திருந்திவிடுவார்கள், தமிழகத்தில் மதுவே இருக்காது என்று நினைத்துக்கொண்டால், அவர்களா பொறுப்பு? ‘ஆடுகள் நனையுதே என்று ஓநாய்கள் அழுததாம்’ என்று சிறிய வயதில் நமக்குக் கற்றுக்கொடுத்த பழமொழியைக்கூட நம்மால் நினைவில் வைத்திருக்கமுடியவில்லை என்றால் என்ன பிரயோசனம்?

    நிற்க… எல்லோரும் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களுக்கு அரசு 10 லட்சம் ரூபாய் கொடுப்பதைக் குறை சொல்லுகிறீர்கள். ஸ்டாலின் அரசு, தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதம் 1000 ரூபாய் ஒவ்வொரு பெண்ணிற்கும் கொடுக்க இயலவில்லை. கொடுத்திருந்தால் அரசு முத்திரையுடன் வரும் டாஸ்மாக் சரக்குகளைக் குடித்து இன்புற்றிருந்திருக்கலாம். தங்களால் மாதம் 1000 ரூ கொடுக்க முடியவில்லை என்பதால்தான் ஏழைகள் கள்ளச் சாராயத்தை நாடி மரணித்துவிட்டார்கள் என்ற குற்ற உணர்ச்சியால் அரசு அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். அதில் என்னால் தவறு காண இயலவில்லை.

  2. Ganapathi Subramanian சொல்கிறார்:

    முதல்வருக்கு வேங்கை வயல் கிராமத்துக்கு பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க செல்ல முடியவில்லை. ஆனால் நேரே , அமைச்சர், அதிகாரிகள் சகிதம் சென்று இழப்பீடு கொடுக்க முடிகிறது. What message this government is trying to give? ஆனால் வேறு கோணத்தில் பார்த்தால், குடிகாரர்கள் அரசின் வாடிக்கையாளர்கள். அவர்களுக்கு என்ன பிரச்சினை….ஏன் டாஸ்மாக்கை விட்டு, கள்ள சாராயம் குடிக்கணும் என்று ஆராய்ந்து அவர்கள் குறையை களைய வேண்டும் என்ற அதீத கடமை உணர்வு. He wishes to understand the problem of customers so that he can rectify and ensure customer delight and thereby grow the main business/ revenue of the government also manifold. இதுதான் திராவிட மாடல் போல. 🤦‍♂️

  3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    // கடந்த மாதம் 18-ந்தேதி …//
    why this news was not released at that time itself and being released only now…???

    இந்நிலையில் திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், கடந்த மாதம் 18-ந்தேதி திண்டிவனம் நத்தமேடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அந்த காருக்குள் ஏராளமான சாராய பாக்கெட்டுகள் இருந்தது.

    இதையடுத்து காரில் வந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் திண்டிவனம் நத்தமேடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் மரூர் ராஜா என்கிற ராஜா (வயது 38) என்பதும், இவருடைய மனைவி ரம்யா திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலராக இருந்ததும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. மேலும் மரூர் ராஜா, தனது வீட்டிலேயே சாராயத்தை தயாரித்து அதனை பாக்கெட்டுகளில் அடைத்து திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி சென்றபோது போலீசாரிடம் சிக்கியது விசாரணைக்கு பின்னர் தெரியவந்தது. இதையடுத்து மரூர் ராஜாவை போலீசார் கைது செய்து திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தார்கள்.

    Read more at: https://tamil.oneindia.com/news/villupuram/tindivanam-dmk-woman-councillor-husband-raja-alias-marur-raja-arrested-by-police-512118.html?story=3

    • புதியவன் சொல்கிறார்:

      இதைவிட டாப் நியூஸ், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றவருக்கு, அவரும் அந்தச் சாராயத்தைக் குடித்துப் பாதிக்கப்பட்டதால், 50,000 நிவாரண நிதியை திமுக அரசு அளித்துள்லது. அமைச்சர், சாராயம் காய்ச்சியவருக்கும் குடும்பம் உள்ளது என்று காரணம் சொல்லியிருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்துச் செத்தவர்களுக்கு 10 லட்சம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ளார் ஸ்டாலின்.

      600/600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 1 லட்சம் ரூபாய், படிப்புக்கு ஸ்டாலின் உதவி அறிவித்தார் என்பது நினைவில் இருக்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s