
…………………………………………………………………………..
வியக்கத்தக்க மன வலிமை, தைரியம்,விடா முயற்சி ….!!!
………………….
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்-ஐ சேர்ந்தவர் 50 வயதான ஃப்ளமினி.
இவர் Time cave பரிசோதனைக்காக தெற்கு ஸ்பெயினில் உள்ள
குகை ஒன்றிற்குள் 2021-ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அனுப்பப்பட்டார்.
230 அடி ஆழத்தில் குகைக்குள் வாழ்ந்த அனுபவங்களை ஒவ்வொரு
நாளும் கேமராக்கள் பயன்படுத்தி முழுமையாக வீடியோ
பதிவு செய்துள்ளார்.
தனது 48ஆவது வயதில் குகைக்குள் சென்ற இவர் இரு பிறந்தநாளை குகைக்குள்ளேயே கொண்டாடியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர்,
உலகக் கோப்பை கால்பந்து போட்டி, துருக்கி நிலநடுக்கம் போன்ற
முக்கிய சம்பவங்கள் எதுவும் தெரியாதபடி வாழ்ந்துள்ளார்.
உளவியலாளர்கள், உடற்பயிற்சியாளர்கள், குகை ஆய்வாளர்கள் என
பலரின் கண்காணிப்பில் இருந்தாலும், 500 நாட்கள் வரை யாருடனும்
நேரடி தொடர்பு இல்லாமல் –
- புத்தக வாசிப்பு, ஓவியம் வரைதல், உடற்பயிற்சி என பொழுது
போக்கியுள்ளார். தற்போது, வெற்றிகரமாக இலக்கை நிறைவு செய்து
வெளியே வந்துள்ளார். - ………………………………………….
500 நாட்களுக்கு பிறகு குகையிலிருந்து வெளிவந்த ஸ்பெயின் பெண் ….
……
.
…………………………………………………………………………………………………………..…