………………………..
ஆளும் கட்சியும், அரசும் – மீடியாக்களை கட்டுப்படுத்துகின்றன
என்று சொன்னால் பல அப்பாவிகள் நம்ப மறுக்கிறார்கள்…
போங்க சார், உங்களுக்கு பிடிக்காதவங்க-ங்கறதால இப்படி
சொல்றீங்க என்று மறுக்கிறார்கள்.
கீழே சொல்லப்படும் செய்தியை தமிழ்நாட்டின் எந்த
தொலைக்காட்சி சேனலாவது வெளியிட்டிருக்கிறதா …???
…………………
.
……………………………………………………………………………..……….
இது பற்றி பாஜக தலைமை அலுவலகம் தில்லியில், பாஜக செய்தித் தொடர்பாளர் சயீஃப் இஸ்லாம் இந்திய ஊடகங்களுக்கு திமுகவின் 1.3 லட்சம் சொத்துக் குவிப்பையும், ஒரு வருடத்தில் உதயநிதி மற்றும் சபரீசன் இருவரும் 30,000 கோடிகளைச் சேர்த்து, அதை எப்படி கணக்கில் கொண்டுவருவது (வெள்ளையாக்குவது) என்று யோசித்துக்கொண்டிருக்கின்றனர் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகச் சொல்லப்படும் ஆடியோவையும் வெளியிட்டார். இதுபற்றி தேசிய அளவில் விவாதம் நடக்கும் என்று தோன்றுகிறது, குறைந்தபட்சம் அண்ணாமலையின் அடுத்தடுத்த குற்றச்சாட்டு, சிபிஐ விசாரணைக்கு அனுமதி கோருவது போன்றவை நடக்கலாம்.
தமிழகத்தில் ஊடகங்களில் உள்ளவர்கள் திமுகவால் கட்டுப்படுத்தப்படக் கூடியவர்கள். அதனால்தான் அண்ணாமலை 1.3 லட்சம் சொத்துக்குவிப்பைப் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியபோது சில நிமிடங்கள் காட்டிய தந்தி தொலைக்காட்சி அதனை உடனே நிறுத்திவிட்டது. புதிய தலைமுறை, 1.3 லட்சம் கோடியைப் பற்றிப் பேசாமல் அண்ணாமலைக்கு 3 லட்சத்துக்கு வாட்ச் எங்கிருந்து வந்தது என்று புலனாய்வு செய்தன.
இப்போது, ஆர்.எஸ்.பாரதி 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு பேப்பர் அனுப்பியிருக்கிறார். உதயநிதி 50 கோடி, டி.ஆர் பாலு 100 கோடி கேட்டிருக்கிறார்கள் (வழக்கு போடறாங்களான்னு பார்க்கணும்). இது பற்றி இளங்கோ பிச்சாண்டி மிக நன்றாக விளக்கியிருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரையில் இந்த processக்கு ஒரே ஒரு சிக்கல் இருப்பதாக அனுமானிக்கிறேன். கர்நாடக தேர்தலில் என் அனுமானம் பாஜக 50 சீட்டுகளே வெற்றிபெறும் என்பது. அப்படி நடந்தால், தமிழக ஊடகங்கள் அண்ணாமலையின் இமேஜை சிதைக்கும் வண்ணம் செய்திகள் விவாதங்கள் நடத்தும். அப்படி நடக்கும்போது அண்ணாமலையின் இரண்டாவது குற்றச்சாட்டு மற்றும் நடைப்பயணத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கிடைக்கும் என்பது தெரியவில்லை. அண்ணாமலை காலை முன்னெடுத்து வைத்துவிட்டார். இது மேலிட ஆசி இல்லாமல் நடந்திருக்காது. அண்ணாமலை has taken a dangerous path in exposing money laundering and swindling. இதன் விளைவை நாம் வரும் மாதங்களில் பார்ப்போம் என்று நினைக்கிறேன்.
அது சரி… பழனிவேல் தியாகராஜன் கழற்றப்பட்டால் ஸ்டாலின் இந்தக் குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டதுபோல ஆகிவிடும். அதனால் PTR மூலமாக என் குரல் இல்லை, மிமிக்ரி, doctored என்றெல்லாம் சொல்ல வைப்பார்கள் என்று தோன்றுகிறது. அல்லது, உடனடியாக ஏதாவது நலத்திட்டத்தை அறிவித்து அதன் மூலம் செய்திகளை திசைதிருப்பலாம் (பெண்களுக்கு மாதம் 1000 என்பது போல).
இந்தச் செய்தி ஒரு புறம் இருக்கட்டும். அண்ணாமலையைப் பிடிக்காத பலர் பாஜகவுக்குள்ளேயே உருவாகுகிறார்கள் பார்த்தீர்களா? மதுரை சரவணன்-வலைபோடப்பட்டவர், பிறகு கவுத்துவிட்டுட்டாங்க, காயத்ரி ரகுராம், சி.டி.நிர்மல்குமார்……, சில நேரங்களில் வானதியும் கொஞ்சம் unconfortableஆக இருப்பதுபோலத் தெரியுது, எஸ்.வி.சேகர் பொறாமையால் புழுங்குகிறார், பழைய தலைவர்கள் தமிழிசை, எல்.முருகன் எப்படி நினைக்கிறார்களோ தெரியவில்லை. இதில் இருவர் மாத்திரம்தான் அண்ணாமலை பக்கம் உறுதியாக இருக்கிறார்கள். ஹெச்.ராஜா-அண்ணாமலை சொன்னால் பாஜக சொன்னதுபோல்தான், தலைவர் அண்ணாமலை சொல்வதுதான் என் கருத்தும். சூர்யா சிவா-எப்போதுமே அண்ணாமலையை விட்டுக்கொடுத்ததில்லை…. கட்சியை விட்டு விலகிய பிறகும்.
ஆனால் அண்ணாமலை போகும் பாதை…. கொஞ்சம் நெர்வஸாகத்தான் இருக்கிறது. தில்லாக, இல.கணேசன் (திமுக…ஹிஹி) வீட்டு நிகழ்ச்சி, சமீபத்தில் எல்.முருகன் கொடுத்த விருந்து என்று புறக்கணிக்கிறார்.. பார்க்கலாம் எந்தப் பக்கம் பாஜக செல்கிறது என்று
அண்ணாமலை அவர்கள் தேர்தெடுக்கும் பாதை, நிச்சயம் அபாயகரமான பாதை தான்.
ஆனாலும், இதுவரை யாரும் கேள்வி கேட்கவே முடியாத பலமான,, பல விழுதுகளை கொண்ட, பெரிய ஆலமரம் போன்று இருந்த திராவிட குடும்ப மரத்தின் விழுதை, முதன்முறையாக, அசாத்திய தைரியத்துடன் , தனியாளாக ,அசைத்து கொண்டிருக்கிறார். dmk வினரின் பயத்தை கண்முன்னே முதன்முறையாக காண்கிறோம். மிகப்பெரிய ரௌடிகள் என நம்பவைக்கப்பட்டவர்கள் , கடைசியில் இவ்வளவு பயந்தாகொள்ளிகளா …
அண்ணாமலை அவரின் இந்த வீரத்திற்காகவே, அவரை நிச்சயம் தலை வணங்குகிறேன் .
ஒருவேளை dmk வின் மீடியா பலம், அவரை ஆட்கொள்ளலாம். ஆனாலும், அந்த சிறிதும் பயப்படாமல் ,அவர்களின் ஆணிவேரை அசைக்கும் , அவர்தம் வீரத்திற்கு ஒரு சலாம் ..