………………………………………

………………………………………….
இந்த வழக்கின் பின்னணி சில சுவாரஸ்யமான செய்திகளை
முன் கொண்டு வந்துள்ளது.
அந்த மானநஷ்ட வழக்கில் கூறப்பட்டிருப்பது
எந்த அளவுக்கு சரி….?
வழக்கு போட்டவர் சொல்வது போல், ஓபிசி பிரிவினர் அவமதிக்கப்
பட்டனரா என்பது குறித்து தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பல
தகவலகளை வெளியிட்டிருக்கிறது….
முழுவதுமாகப் படித்தால்,
இந்த வழக்கைப்பற்றி சிரிப்பு தான் வருகிறது….
எக்ஸ்பிரஸ் தமிழ் நாளிதழிலிருந்து சில பகுதிகள் கீழே –
https://tamil.indianexpress.com/explained/modi-surname-gujarat-explained-621398/
……………………………….
இது குறித்து, ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கிரிட் பன்வாலா
நீதிமன்றத்தில் வாதிடுகையில், ‘மோடி’ என்ற “அடையாளம்
காணக்கூடிய மற்றும் உறுதியான” சமூகம் இல்லை.
“மோத்வானிக் சமூகத்தை ‘மோடி’ சமூகம் என்று பூர்ணேஷ் மோடி குறிப்பிடுகிறார்; அதற்கு (‘மோடி’ சமூகம்) உண்மையில் எந்த
ஆதாரமும் இல்லை. ‘மோடி’ சமூகம் 13 கோடி மக்களைக்
கொண்டிருந்தாலும், அது அடையாளம் காணக்கூடிய மற்றும்
உறுதியான சமூகம் அல்ல,” என்று அவர் தி இந்தியன்
எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
“ அவர் (ராகுல்) எந்த சமூகத்தையும் அவமதிக்கவில்லை.
மோடி குடும்பப்பெயர் மோத்வானிக் சமூகத்திற்கு மட்டும்
சொந்தமானது அல்ல, பிற சாதியினருக்கும்
உள்ளது. சரியான அடையாளம் நிறுவப்பட்டால், [மட்டும்]
இந்த வழக்கு தொடரக்கூடியது… இங்கு, அடையாளம்
நிறுவப்படவில்லை, ”என்று கிரிட் பன்வாலா கூறினார்.
பலர் மோடி என்ற குடும்பப் பெயரைப் பயன்படுத்தினாலும்,
அது குறிப்பிட்ட சமூகத்தையோ சாதியையோ குறிக்கவில்லை.
குஜராத்தில், மோடி குடும்பப் பெயரை
இந்துக்கள்,
முஸ்லிம்கள்
மற்றும் பார்சிகள்
- பயன்படுத்துகின்றனர். வைஷ்ணவர்கள்
(பனியாக்கள்), கர்வாக்கள் (போர்பந்தரைச் சேர்ந்த மீனவர்கள்),
மற்றும் லோஹானாக்கள் (வணிகர்களின் சமூகம்) மத்தியில்
மோடி குடும்பப்பெயர் கொண்டவர்கள் உள்ளனர்.
லால்வாலாவின் கூற்றுப்படி, குஜராத்தில் சுமார் 10 லட்சம்
மோத்வானியர்கள் உள்ளனர். அவர்கள் முக்கியமாக வடக்கு
மற்றும் தெற்கு குஜராத்தில் இருந்தாலும், மாநிலத்தில் எல்லா
இடங்களிலும் வாழ்கின்றனர்.
அனைத்து மோடிகளும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்
சேர்ந்தவர்களா?
இல்லை, அவர்கள் OBC இல் இல்லை. உண்மையில்,
வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டிற்கான OBC- களின்
மத்திய பட்டியலில் “மோடி” என்ற பெயரில்
எந்த சமூகமும் அல்லது சாதியும் இல்லை.
குஜராத்தில் இருந்து OBC-களின் 104 சமூகங்களின் மத்திய பட்டியலில்
உள்ள நுழைவு எண் 23: “காஞ்சி (முஸ்லீம்), டெலி, மோத் காஞ்சி,
டெலி-சாஹு, டெலி-ரதோட், டெலி-ரத்தோர்.” இந்த சமூகங்கள்
அனைத்தும் பாரம்பரியமாக சமையல் எண்ணெய்கள் பிரித்தெடுத்தல்
மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
கிழக்கு உத்தரபிரதேசத்தில் வசிக்கும் இந்த சமூகங்களைச்
சேர்ந்தவர்கள் பொதுவாக குப்தா என்ற குடும்பப்பெயரையும்,
பெரும்பாலும் மோடியையும் பயன்படுத்துகின்றனர்.
OBC களின் மத்திய பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள பீகாரைச்
சேர்ந்த 136 சமூகங்களில், “தெலி” (பீஹாரின் OBC களின்
மத்திய பட்டியலில் உள்ள நுழைவு எண் 53) இருந்தாலும்,
“மோடி” இல்லை.
மத்திய OBC பட்டியலில் உள்ள ராஜஸ்தானின் 68 சமூகங்களின்
பட்டியலில், 51 வது நுழைவாக “தெலி” உள்ளது, ஆனால் “மோடி”
என்று பட்டியலில் எந்த சமூகமும் இல்லை.
மோடி குடும்பப்பெயர் கொண்டவர்கள் வேறு எங்கு
(குஜராத் தவிர) வாழ்கிறார்கள்?
மேலே சொன்னது போல உ.பி.யிலும் பீகாரிலும் மோடிகள்
இருக்கிறார்கள்.
ஹரியானாவின் ஹிசாரில் உள்ள அக்ரோஹாவைச் சேர்ந்தவர்கள்
எனக் கூறப்படும் அகர்வால்களின் திரளான மார்வாரிகளால்
இந்த குடும்பப்பெயர் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது,
பின்னர் ஹரியானாவின் மகேந்திரகர் மற்றும் ராஜஸ்தானின்
ஜுன்ஜுனு மற்றும் சிகார் போன்ற மாவட்டங்களுக்கு பரவியது.
முன்னாள் ஐ.பி.எல் நிர்வாகி லலித் மோடியின் தாத்தா,
ராய் பகதூர் குஜர் மால் மோடி, மகேந்திரகரில் இருந்து மீரட்
அருகே குடியேறினார்.
வெளிநாட்டுக்குத் தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி
குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்தவர், பாரம்பரியமாக
வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் சமூகத்தைச் சேர்ந்தவர்.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரஸ்ஸி மோடி
மற்றும் மேடை மற்றும் திரைப்பட ஆளுமை சோஹ்ராப் மோடி
ஆகியோர் பம்பாயிலிருந்து (மும்பை) பார்சி சமூகத்தைச்
சேர்ந்தவர்கள் ஆவர்.
.
………………………………………………………………………………………….………..
காந்தி என்ற பெயர் உள்ளவர்கள் தேசவிரோதிகள், பயங்கரவாதிகள் என்று நான் சொன்னால், அதற்காக என்மேல் வழக்கு வருமா இல்லை உங்களிடமிருந்து பாராட்டுப் பத்திரம் வருமா?
இங்கு பிரச்சனை, மோடி என்ற பெயர் உள்ளவர்கள் எல்லோருமே திருடர்கள் என்று ராகுல் ஃபெரோஸ் பேசியது. குன்ஹாவைப் போன்ற, அதீதமாகத் தண்டனை அளிக்கும் நீதிபதிகள் நீதித்துறையில் உண்டு. இந்த வழக்கும் மேல் நீதிமன்றங்களில் நிற்காது போகலாம். ஆனால் ராகுல் ஃபெரோஸ் சிறுபிள்ளைத்தனமாக (immatured way) தொடர்ந்து பேசுகிறார். நேற்றுக்கூட சாவர்கரைப் பற்றிப் பேசி, சிவசேனையின் எதிர்ப்புக்குரலைப் பெற்றுள்ளார். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ராகுல் ஃபெரோஸ் ஒரு தற்குறி என்பதுதான்.
நானும் பல பஞ்சாபி முஸ்லீம்களின் ஹிந்து சாதி/சமூகப் பெயர் தொடர்வதைக் கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். அதுபோலவே தமிழகத்தில் சில சாதிகளும், மதம் மாறினாலும் சாதி அடையாளத்தைத் தொடர்கின்றனர்.
ராகுலின் பிஸினெஸ் எல்லாமே வெளிநாட்டில்தான். ஆனால் இந்தியர்களை, சுதந்திரப்போராட்ட வீரர்களை அவமதிப்பது போலப் பேசுவது இவரது அஜெண்டா. கோர்ட்டில் மாட்டிக்கொண்டால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவும் தயங்காதவர். வாஜ்பாய் செய்த மிகப் பெரிய தவறு, இந்திய நாட்டின் டிப்ளமஸி சேனலை உபயோகப்படுத்தி, போதை மருந்து கடத்தியதனால்/வைத்திருந்தனால் அமெரிக்க போலீஸால் கைது செய்யப்பட்ட ராகுல் ஃபெரோஸை விடுவிக்கச் சொல்லி கேஸை வாபஸ் வாங்கவைத்தது. இதைச் செய்யாதிருந்தால், ராகுல் ஃபெரோஸின் லட்சணம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
புதியவன்,
இந்த செய்தியை படித்தால்,
இப்போதும் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.
-இது இறுதியாக
எங்கே சென்று, எப்படி முடியும் என்று –
கட்சி சார்பில்லாமல்,
இயல்பாக, தன்னிச்சையாக யோசிக்கும்போது –
சிரிப்புத்தான் வரும்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
புதியவன்,
//காந்தி என்ற பெயர் உள்ளவர்கள் தேசவிரோதிகள்,
பயங்கரவாதிகள் என்று நான் சொன்னால்,
அதற்காக என்மேல் வழக்கு வருமா இல்லை
உங்களிடமிருந்து பாராட்டுப் பத்திரம் வருமா? //
என்னிடமிருந்து இரண்டும் வராது….. !!!
உங்கள் மனசாட்சி அப்படிச் சொன்னால், தாராளமாக
சொல்லி விட்டு போங்களேன்… உங்களை முழுமையாக
புரிந்துகொள்ள அது உதவியாக இருக்கும் …!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இதே போன்று,வேறு யாராவது,பொது மேடையில் ,கொள்ளையடிக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே ஏன் காந்தி ,நிதி என்று பெயர் வருகிறது, என்று நையாண்டி செய்யாமல் இருந்தால் சரி…
அப்போது இவர்களுக்கு கோபம் வராது என நம்புவோம் ….
அதற்காக இந்த கேஸில், பாஜகவின் கை இல்லை என்று நான் எழுதவில்லை. கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பாஜக பயன்படுத்துகிறது. மன்மோகன் சிங்கும் கபில் சிபலும் நன்றாகவே சிரித்துக்கொண்டிருப்பார்கள்.
// கிடைத்த வாய்ப்பை நன்றாகவே
பாஜக பயன்படுத்துகிறது…//
வாய்ப்பு தானாக கிடைக்கவில்லை…
உருவாக்கியதே அவர்கள் தானே… !!!
இது முட்டாள்தனமான வழக்கு. “நான் எல்லா மோடி களையும் சொல்லவில்லை. நான் பேசிய கான்டெக்ஸ்ட் பார்த்தாலே நான் எல்லா முடிகளையும் சொல்லவில்லை என்பது தெளிவு. அப்படியும் யாராவது மனம் புண்பட்டிருந்தால் தப்பு செய்யாத மோடிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று ராகுல் சொன்னாலே போதும். எந்த வித அடிப்படையும் இல்லாத கேஸ் இது! தண்டனைக்குரிய தவறை ராகுல் செய்ததாக நான் கருதவில்லை. அதே சமயம், “அவர் மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல” என்று பொங்கும் அளவு இது வீரதீர பேச்சும் அல்ல!
இதன்மூலம் ராகுல் கொஞ்சம் பிரபலமாகலாம். எதிர்க்கட்சிகள் யார் பின்னால் அணிவகுப்பது என்று மேலும் குழம்பலாம்! அவ்வளவுதான்! இதுதான் பிஜேபியின் நோக்கமாக இருக்கும்!
இன்னும் சில வாரங்கள் இந்த காட்சிகள் ஓடும்!