………………..

ஆனந்த விகடன் வார இதழில், 1969 டிசம்பர் –ல்
வெளிவந்த சோ அவர்களின் பேட்டியிலிருந்து …
( இந்த பேட்டியின்போது சோவின் வயது – 35 மட்டுமே ….)
நிருபர்: நீங்கள் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகப் பலர்
சொல்கிறார்களே, உண்மையா?
சோ: யாரெல்லாம் சொன்னார்கள்?
நிருபர்: மன்னிக்கவும்! நான் உங்களைப் பேட்டி காண
வந்திருக்கிறேனா அல்லது நீங்கள் என்னைப் பேட்டி
காணப் போகிறீர்களா?
சோ: நான் உங்களைக் கேள்வி கேட்க
ஆரம்பித்ததிலிருந்தே – நானும் ஒரு பத்திரிகைக்காரனாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லையா?
நிருபர்: உங்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது?
சோ: அது தமிழ்நாட்டின் தலை விதி…….!!!!!
நிருபர்: உங்கள் பத்திரிகையின் ஆசிரியர் யார்….?
சோ: ஒரு சகலகலா வல்லவர்……!!!!
நிருபர்: யார் அது…..?
சோ: நான்தான்….!!!
நிருபர்: பத்திரிகை ஆரம்பிக்கும் நோக்கம்,
லட்சியம் என்ன?
சோ: மக்களுக்கு நல்வழி காட்டி ஒரு புதிய பாரதத்தை
உண்டாக்க வேண்டும்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக
எல்லா மக்களும் தோள் கொடுத்துச் செயலாற்ற
வேண்டும்;
ஒவ்வொரு தமிழனும் தன் கடமையை உணர்ந்து
தன்னைப் பெற்ற தாய்க்கும், தான் பிறந்த மண்ணிற்கும்
பெருமை தேடித் தர வேண்டும்; இலக்கியம், பண்பாடு,
இந்தியக் கலாசாரம் இவை ஓங்கி வளரவேண்டும்.
– ஆகிய இந்த லட்சியங்களுக்காகத்தான் நான்
பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால்,
அது என் தவறல்ல ……!
பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது;
ஆரம்பிக்கப் போகிறேன்.
அவ்வளவுதான்……!
நிருபர்: உங்கள் பத்திரிகை எப்போது வெளிவரும்….?
சோ: பொங்கல் ரிலீஸ்…..!!!!
நிருபர்: முதல் இதழில் உங்கள் பத்திரிகையில்
என்னென்ன வரும் என்று சற்று விளக்கமாகக்
கூற முடியுமா?
சோ: ஏன்….?
துக்ளக்கை யாரும் வாங்கக் கூடாது,
உங்கள் ஆனந்த விகடனையே படித்துத் தெரிந்து
கொள்ள வேண்டும் என்று பார்க்கிறீர்களா?
நிருபர்: சரி….! உங்கள் பத்திரிகையின்
அமைப்பைப் பற்றி ஏதாவது கூற முடியுமா?
சோ: எவற்றையெல்லாம் பார்த்து எனக்குச் சிரிப்பு
வருகிறதோ அவற்றையெல்லம் பார்த்து மக்களையும்
சிரிக்க வைக்க முயலப் போகிறேன்.
I am going to look around me
and also make my readers
look around themselves.
.
………………………………………….