அரசாங்கம் அச்சடிக்காத 500 -2000 ரூபாய் கரன்சி நோட்டுகள் – ரிசர்வ் வங்கி தரும் அதிர்ச்சி ….

………………………..

…………………………………

……………………

முதலிலேயே ஒரு விஷயத்தை தெளிவாக்கி விடுகிறேன் ….
கீழேயுள்ள அதிர்ச்சி தரும் தகவல் முழுக்க முழுக்க
பத்திரிகைச் செய்தி மட்டுமே…..இதில் விமரிசனம் ஏதுமில்லை….

( விமரிசனத்தை தனியே பின்னூட்டங்களில்
வைத்துக் கொள்ளலாம் ….)

( https://www.indiatoday.in/india/story/congress-tmc-bjp-demonetisation-rbi-report-fake-currency-notes-1955581-2022-05-29 )

RBI report shows spike in fake notes,
Opposition trains guns on Centre over demonetisation ….

May 29, 2022UPDATED:

The Reserve Bank of India’s latest annual report
has given Opposition parties fresh ammunition in
their attack on the BJP-led central government’s
demonetisation move back in 2016.

As per the RBI report, counterfeit notes of all
denominations increased in the financial year 2021-22.
The RBI detected 101.9 per cent more fake notes
of Rs 500 denomination and 54.16 per cent more
fake notes of Rs 2,000 denomination as compared to
the previous year…..(????? !!!!)

Apart from flushing out black money, the elimination
of fake currency notes had been cited as one reason
for the demonetisation exercise conducted by the
central government in 2016.

DEMONETISATION

In November 2016, the government announced the
demonetisation of all Rs 500 and Rs 1,000 banknotes.
It also announced the issuance of new Rs 500 and
Rs 2,000 banknotes.

The Centre said the move would curtail corruption,
encourage digital transactions and reduce the use of
counterfeit currency.

The sudden demonetisation announcement resulted in
cash shortages and inconveniences as people stood
in long queues to exchange their notes.
The issue has been debated heavily ever since.

.
…………………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to அரசாங்கம் அச்சடிக்காத 500 -2000 ரூபாய் கரன்சி நோட்டுகள் – ரிசர்வ் வங்கி தரும் அதிர்ச்சி ….

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அதிர்ச்சி தரும் செய்தி என்று தான்
    தலைப்பு போட்டிருந்தேன்….

    அதற்காக எல்லாரும் இப்படி அதிர்ந்து போய்
    கருத்து கூற கூட மறந்து, திகைத்து நிற்பார்கள்
    என்று நான் நினைக்கவில்லை…

    ———————

    அரசு அச்சடிக்கவில்லையென்றால்,
    வேறு யார் இந்த கள்ள கரன்சிகளை
    அதே போலவே, இவ்வளவு அழகாக, திறமையாக
    அச்சடித்து, புழக்கத்தில் விட்டிருப்பார்கள்…?

    அரசாங்கத்தின் சுமையை நாமும் பகிர்ந்து
    கொள்வோமே என்று நினைத்து
    நாட்டின் சில “பெரிய”, பணக்காரர்கள்
    தாமே இந்த வேலையை மேற்
    கொண்டிருக்கக்கூடுமோ …!!!

    ஆனால், ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம்
    இந்த தகவலை வெளியிடும் வரையிலும் –
    இதைப்பற்றிய எந்தவித அறிவோ, உணர்வோ
    இல்லாத –
    நமது புலனாய்வு ஏஜென்சிக்களின் திறமையை,
    விழிப்புணர்வை என்னவென்று சொல்வது….?

    சரி, இப்போது –
    மீண்டும் புழக்கத்தில் வந்திருக்கும் இத்தனை
    கோடி ரூபாய் கள்ள நோட்டுகளை எப்படி
    சரி செய்யப்போகிறார்கள்….?

    மீண்டும் ஒரு டீமானடைசேஷன்…..?????

    .

  2. Tamil சொல்கிறார்:

    அதாவது 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் மதிப்பு 2.7 கோடி
    அதாவது 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் மதிப்பு 3.91 கோடி
    ஆக ஆறுகோடி ரூபாய் அளவிலான கள்ள நோட்டு கண்டறியப்பட்டுள்ளது.

    ஆனால் ஒரு குறிப்பிட்ட கால அளவில் எத்தனை நோட்டுகள் (யுனிக் நோட்டுகள்) ஆர்பிஐ மற்றும் வங்கிகள் வசம் வந்து பிறகு மக்களிடம் சென்றன என்கின்ற கணக்கு இல்லாமல் இதைப்பற்றி எதைச் சொன்னாலும் அது ஒரு தலைப் பட்சமாகவே இருக்கும்.

  3. Thirumalachari thiruvengadam சொல்கிறார்:

    May be preparing for another demonetization before the election?
    Thiruvengadam thirumalachar

  4. Azeez Shaik சொல்கிறார்:

    ஐயா வணக்கம்
    தங்களின் மேலே கூறப்பட்ட பகிர்வுக்கு சம்பந்தமாக ஒரு காணொளி

    நன்றிகளுடன்
    அஜீஸ்

  5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    மிக்க நன்றி அஜீஸ்…

    இந்த காணொளி – சாதாரணமாக
    பொதுமக்களில் பெரும்பாலானோருக்கு
    தெரிய வாய்ப்பில்லாத பல அதிர்ச்சி தரும்
    விஷயங்களை வெளிப்படுத்துகிறது…

    நான் இந்த இடுகையை பதிவிடும்போது,
    நிறைய விவாதங்களை எதிர்பார்த்தேன்.
    ( அப்போது நான் இந்த காணொளியை
    பார்த்திருக்கவில்லை….)
    ஆனால் வழக்கமாக பின்னூட்டம் போடும்
    பலரும் கூட இந்த விஷயத்தில் தவிர்த்து
    விட்டதை பார்க்கும்போது
    ஆச்சரியமாகவும், வேதனையாகவும்
    இருக்கிறது.

    மிகப்பெரிய நிர்வாகத் தோல்வி இது.
    நடுநிலையுடன் சீரியசாக அணுக வேண்டிய
    ஒரு விஷயத்தை வழக்கமாக உரத்துப் பேசும்
    சிலரும் கூட வாய் மூடி மௌனம் காத்து தவிர்ப்பது
    வருந்தத்தக்க விஷயம்.

    மீண்டும் ஒருமுறை நன்றியுடனும்,
    வாழ்த்துகளுடனும் –

    -காவிரிமைந்தன்

    .

    • Manivannan Kamaraj சொல்கிறார்:

      இவை எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் கடந்த 67 ஆண்டுகளாக இந்தியாவை மத்தியில் ஆட்சி செய்தவர்கள் மட்டுமே தான் என்று தற்பொழுது ஆட்சியில் உள்ளவர்கள் சொல்வார்கள் சொல்வார்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் இன்னும் சொல்வார்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.