…….

………..
தமிழ் நாட்டில் பேசி இருந்தால் இதை வேறு வகையில்
புரிந்து கொண்டிருப்போம்.
ஆனால் – இது குஜராத்தில் நடக்கிற ஒரு பொதுக்கூட்டம்;
உலகிலேயே பழைய மொழி என்று பெருமையோடு
தமிழை பாராட்டி –
பாரதியின் பாடலொன்றை –
முழுவதுமாக (மனப்பாடம் செய்து) மேடையில் கூறுகிறார்…
( மொழி உச்சரிப்பைப்பற்றி கவலைப்படாதீர்கள். ஒரு குஜராத்திக்காரர், அதுவும் இத்தனை பெரிய பொறுப்பில் இருப்பவர், இந்த அளவிற்கு தமிழை உச்சரிப்பதே பெரிய விஷயம் தான்….)
(கையில் எந்த குறிப்பும் இல்லை …)
…………………………………..
“மன்னும் இமயமலை எங்கள் மலையே;
மாநிலமீததுபோல் பிறிதில்லையே!
இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே;
இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?
பன்னரும் உபநிட நூல்எங்கள் நூலே;
பார்மிசை ஏதொரு நூலிது போலே!
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே;
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!
மாரத வீரர் மலிந்த நன் நாடு;
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு!
நாரத கான நலம் திகழ் நாடு;
நல்லன யாவையும் நாடுறு நாடு!
பூரண ஞானம் பொலிந்த நன் நாடு;
புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு!
பாரத நாடு பழம்பெரும் நாடே;
பாடுவம் இதை எமக்கில்லை ஈடே! “
……………………….
அத்துடன் நிற்காமல், அந்த முழுப் பாடலையும்
அழகாக ஹிந்தியில் – கவிதை வடிவில் – மொழிபெயர்த்து –
கூட்டத்தினருக்கு அக்கறையோடு விளக்குகிறார்.
…….
……..
அரசியலை தனியே தள்ளி வைத்து விட்டு
ஓரு தமிழன் என்கிற உணர்வில் –
மோடிஜியை – அவரது தமிழ் ஆர்வத்திற்காக, முயற்சிக்காக,
உழைப்பிற்காக –
- உளமாற பாராட்டுகிறேன்.
.
…………………………………………………………………………………………..