
……….
அண்மையில், இலங்கைக்கு சென்று வந்த தமிழக பாஜக
தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை
சந்தித்து விவரமாகஉரையாடி இருக்கிறார் …
இலங்கைக்கு இந்தியா செய்துவரும் பல உதவிகளைப்பற்றி
தமிழ் நாட்டில் பலருக்கும் தெரியாது….அதற்கான முக்கிய
காரணம் நமது தமிழ் ஊடகங்களே….
தமிழ் நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள், தங்களது
ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளின் காரணமாக மக்களின்
நம்பிக்கையை இழந்து விட்டன.
இந்த நிலையில், அண்ணாமலை அவர்களின் பேட்டியில்
சொல்லப்பட்டிருக்கும் பல செய்திகள் தமிழக மக்களை
சென்றடைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்… ..
( அண்ணாமலை அவர்களின் இலங்கைப் பயணம் முக்கிமானது…. ஏனெனில், மலையக மற்றும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளுடன் பேசி, அவர்கள் இந்தியாவிடம் எதிர்பார்ப்பது என்ன;…… அவர்களின் உண்மையான பிரச்னைகள் என்ன …. என்பதை கண்டறிந்து, அறிக்கை அளிக்குமாறு அண்ணாமலையிடம் பாஜக மேலிடம் கூறியுள்ளது…..)
(முக்கியமாக, கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து, நீண்ட கால குத்தகையாக 99 ஆண்டுகளுக்குப்பெறும் யோசனை ஒன்றும் மத்திய அரசுக்கு சொல்லப்பட்டிருப்பதாகத்தெரிகிறது. இது நிறைவேறுமானால், தமிழக மீனவர்களின் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம்… இந்த முயற்சி வரவேற்கத்தக்கது…)
- என்னால் இயன்றது –
செய்தியாளர் சந்திப்பின் காணோளி கீழே ….!!!
……
.
…………………………………………………………….
ஏற்கனவே எங்கள் தலைவர் சுடாலின் அவர்கள் கச்ச தீவை மீட்பதற்கு, பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதிவிட்டார் .எனவே நாளை அது மீட்கப்பட்டால், அதில் sticker ஓட்டுவதற்கு , அவருக்கு மட்டுமே முழு உரிமை உள்ளது.பிஜேபி க்கு, எந்த உரிமையும் கிடையாது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
இலங்கை இருக்கின்ற இந்த இக்கட்டான நிலைமையில் கூட இந்தியாவால் எதையும் சாதிக்க முடியவில்லை என்றால் இவர்கள் எவ்வளவு கேவலமானவர்கள் நாம் எவ்வளவு ஏமாளிகள் என்பது விரைவில் தெரிந்துவிடும்