…

……


போர் ஒரு நாள் முடிந்து விடும்…
தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வார்கள் …
ஆனால், அந்த வயது முதிர்ந்த அந்தப் பெண்மணி
(கொல்லப்பட்டுவிட்ட ) தன் மகனின் வருகைக்காக –
இன்னமும் காத்துக் கொண்டிருப்பாள்….
(அவன் கொல்லப்பட்டு விட்டது தெரியாமல்) தன் அன்புக் கணவனின் வருகைக்காக அந்த இளம்பெண் இன்னமும் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பாள்…
அந்த குழந்தைகள் வீர (மரணம் அடைந்து விட்ட )
தங்கள் தந்தை வருவாரென்று இன்னமும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்…
.
எங்கள் நாட்டை விற்றவர்கள் யாரென்று…
எனக்கென்னவோ தெரியவில்லை –
ஆனால் – அதற்கான விலையை கொடுத்தவர்களை
மட்டும் இங்கே – பார்த்துக் கொண்டிருக்கிறேன்….
