
கொரோனா இரவில் தான் பரவுமா….?
பகலில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஓருவரோடொருவர் இடித்துக்கொண்டு, நெருக்கமாக கூடினாலும்
பரவாதா….?
உத்திர பிரதேச அரசுக்கு எந்த நிபுணர் அளித்த
பரிந்துரை இது….?

பாஜக எம்.பி. வருண் காந்தி கேட்கிறார்…
பாஜக முதலமைச்சர் யோகிஜி பதில் சொல்வாரா…..?
………….
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேசத்தில்
கடந்த 25ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
படுத்தப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி
வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல்,
திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளபோதும் பகல் நேரத்தில் கட்டுப்பாடுகள்
எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால், தேர்தல் பிரசாரங்கள்
தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஓமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் லட்சக்கணக்கான தொண்டர்களை வைத்து
தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து சொந்த
கட்சியான பாஜவை தற்போது பாஜக எம்.பி.யாக இருக்கும்
வருண் காந்தியே விமர்சனம் செய்துள்ளார்.
வருண் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
பதிவில், இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது,
பகல் நேரத்தில் லட்சக்கணக்கான மக்களை பேரணியில்
பங்கேற்க அழைப்பது சரியா என கேள்வியெழுப்பி
இருக்கிறார்…!!!
யோகிஜியிடமிருந்து இதற்கு பதில் வருமா ….?
.
…………………………………………….