
- 14/12/21 -அன்று நாடாளுமன்றத்தில் – தமிழகத்தைச் சேர்ந்த
நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன்
பேசும் நேரலை காட்சியைக் கொண்ட காணொலி கீழே –
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழக M.P. ஒருவர்
அருமையான உரை ஒன்றை நிகழ்த்துவதைப் பார்க்கிறோம்….
திரு.தயாநிதி’யின் உரை தமிழகத் தேவைகளைப் பற்றியும்,
பின்னர் குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களில், முக்கியமாக வங்கிகளில் நிகழும் ஊழல்களைப் பற்றியுமே இருந்தது…
வங்கிகளில் வாராக் கடன்களை ரத்து செய்கிறோம் என்கிற
பெயரில் அடிக்கப்படும் கொள்ளைகளைப்பற்றி, அவர் கூறுவது
பெரும்பாலும் உண்மையே…
இந்த இடுகையைப் பார்த்ததுமே யாராவது –
தயாநிதி மாறன் லட்சணம் தெரியாதா என்று
அவர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றி
பேச ஆரம்பித்து விடக்கூடும் …… அப்படி யாரும் எழுதும் முன்பே
நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன் – தயாநிதி மாறன்
மீதுள்ள ஊழல் புகார்களை நான் மறக்கவில்லை; சமூகமும் மறக்காது…
தேவைப்படும் சமயங்களில் அந்த விமரிசனங்கள் மீண்டும் தனியே தொடரும்.,…
– அது தனி விவகாரம்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி.யாக தயாநிதி பேசுவது பற்றியது மட்டுமே
இந்த இடுகை. … அவரது உரையில் வெளிவரும் விஷயங்களின் மீது மட்டுமான விவாதங்களை இங்கே வைத்துக் கொள்ளலாம்….
அவர் மீதுள்ள புகார்களைப்பற்றி, தனியே அந்த இடுகைகள் வரும்போது – தனி ஆவர்த்தனம் நிகழ்த்திக் கொள்ளலாம்….
கீழே, தயாநிதி மாறன் -பாராளுமன்றத்தில் 14/12/21 அன்று
ஆற்றிய உரையின் காணொலி –
………………………
.
…………………………………………………………………………………………………………..………………………
பாம்பின் கால் பாம்பறியும்
தயாநிதி மாறனால், தொலைத்தொடர்பு, ஜவுளித்துறை அமைச்சகத்தில் நடைபெறும் ஊழல்களையும் தெள்ளத் தெளிவாகப் பேச முடியும். அவ்வளவு திறமை மிக்கவர் அவர்
Pity on the speaker, Maran told 5 times that he is only speaker and then only he realised and confirmed are you the only speaker, so i am sure he has not not got what he talked.
What is happening is a complete SCAM, why Maran is saying he might think its a SCAM and also is not telling common man is telling.
he does not have guts to talk and tell that there are 100s of SCAMs happening in Central government. may be 2G case is coming on his back of his mind.
எனக்க்ன்னவோ… அவங்களுக்கு இந்த டீலைக் கொடுக்கலைன்னு வயித்தெரிச்சல்லதான் தயாநிதி மாறன் பேசியிருக்கார். சொந்த லாபம் இல்லாமல் கருணாநிதி குடும்பமே எதையும் சிந்திக்காது.
Reply from FM,