கண்ணானாய் – காண்பதுமானாய் ….!!!

நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு சாதனை…
26 நூல்கள்(பாகங்கள்), 26,000 பக்கங்கள்,
7 வருடங்கள் தொடர்ச்சியாக தினமும் ஒரு அத்தியாயம் –
உலக அளவிலேயே மிகப்பெரிய நாவல் ….

மஹாபாரதத்தின் மறு ஆக்கம் – “வெண்முரசு” அற்புதமான
தமிழ் நடையில் ….

ஜெயமோகன் அவர்களின் “வெண்முரசு” நாவலைக்
கொண்டாடும் விதமாக, அமெரிக்காவிலிருந்து இயங்கும்
விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஒரு நிகழ்ச்சியை –

“வெண்முரசு இசைக்கொண்டாட்டம்” என்கிற தலைப்பில்
ஏற்பாடு செய்திருந்தது…

கடந்த சனிக்கிழமை மாலை காணொலி மூலம் நடைபெற்ற
இந்த நேரடி நிகழ்ச்சியில் – இந்த இசை, திரைப்பட
இயக்குநர் மணிரத்னம் அவர்களால் வெளியிடப்பட்டது.
பல பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர்….

கம்போஸர் ராஜன் இதனை இசையமைத்து,
ஒருங்கிணைத்திருக்கிறார்….

இந்தப் பாடலுக்கான வரிகள், வெண்முரசு நாவலிலிருந்தே –

  • நீலம் பகுதியிலிருந்து – தேர்ந்தெடுக்கப்பட்டு
    தொகுக்கப்பட்டிருக்கின்றன….
    ( காணொலிக்கு கீழே தந்திருக்கிறேன்…)

கீழே அந்த இசை – காணொலி வடிவில்….

பங்களிப்போர் யார் யார் என்பதை காணொலியிலேயே
காண்பது தான் சிறப்பு.

…….

……..

Pallavi:


கண்ணானாய், காண்பதுமானாய்!
கருநீலத் தழல்மணியே!

Anupallavi:


கருத்தானாய், கடுவெளியானாய், கடந்தோய், காலமானாய்!

கடந்தோய், காலமானாய்!

Charanam-1


கானுறைவோய், கடலுறைவோய்,
வானுறைவோய், வளியுறைவோய்,

எங்குளாய் இலாதவனாய்?

Charanam-2
சிறுதண்டை சுழன்ற மென்கால்மலரே,
விரிமலர் முதலிதழோ எனத்தோன்றும் பெருவிரலே,
இளம்பாளை தளிரென்ற பாதப்பரப்பே,
அதிலெழுந்த ஆழி சங்குச் சுழியே,
அமுதுண்ணும் களிப்பில் நெளியும் சிறுகுமிழ் விரல்களே,
அமைக என் தலைமேல்! அமைக இப்புவிமேல்!

அமைக திருமகள் மடிமேல்!

charanam-3:

யானென்று எனதென்று எழுந்த பெருக்கே,
தனியென்று சூழென்று அலைக்கும் கணக்கே,
மெய்யென்று பொய்யென்று அழைக்கும் திசையே,
ஏதென்று எதற்கென்று எழுந்த துயரே,
வாழ்வென்று சாவென்று எழுந்த மயக்கே ,
காத்தருள்க என் மகவை!
காத்தருள்க என் மகவை!
காத்தருள்க!


Charanam-4


சொல்லுரைத்து செயல்காட்டிச் சென்ற அரசே,
சொல்லவிந்து செயலமைந்து மயங்குக இங்கே!
உன் சிறுகைவிரல்கள் தளர்க! உன் தளிர்க்கால் சரிந்தமைக!
நீள்பீலி நெடுவிழிகள் வளர்க!
உன் முடியிலெழுந்த பீலிவிழி மட்டும் இமையாதாகுக!

கண்ணே, இப்புடவிமேல் உன் நோக்கு ஒருகணமும் அணையாதாகுக!

Charanam-5


ஞாலப்பெருவிசையே. ஞானப்பெருவெளியே.
யோகப்பெருநிலையே இங்கெழுந்தருளாயே!

Final Crescendo:


கருநீலத் தழல்மணியே!
வானெழுந்த சுடரொளியே!

……………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to கண்ணானாய் – காண்பதுமானாய் ….!!!

  1. Tamil சொல்கிறார்:

    மிகச் சிறந்த தகவல், நன்றி ஐயா.

  2. Kamal சொல்கிறார்:

    நீலம் நாவல் முழுவதுமே ஒரு வித சந்தத்துடன் எழுதப்பட்டிருக்கும்.
    கண்ணனை நாயகனாக கொண்ட நாவல். ஜெயமோகனது இணையதளத்தில் இலவசமாக படிக்க முடியும்.
    https://venmurasu.in/neelam/chapter-1/

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.