
1958-ல் வெளியான மாடர்ன் தியேட்டர்ஸ் படம்
பெற்ற மகனை விற்ற அன்னை -விசித்திரமான பெயர்…!
அப்போதெல்லாம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்
ஒரு தொழிற்சாலை மாதிரி இயங்கி, வருடத்திற்கு
3-4 தமிழ்ப்படங்களை வெளியிட்டுக் கொண்டு வந்தது.
அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவருமே
மாதச்சம்பளத்திற்கு தான் நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள்…
துவக்க கால வாழ்க்கையில் இருந்தபோது,
கவிஞர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதியும்
கூட இதில் சேர்த்தி.
நான் இந்தப் படத்தை இன்று வரை பார்க்கவில்லை;
ஆனால், இதில் வரும் ஒரே ஒரு பாடல் –
என்றுமே மறக்க முடியாத அளவிற்கு சின்ன வயதிலேயே
என்னைக் கவர்ந்தது.
விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் அருமையான
ஆர்கெஸ்டிரேஷன் தான் இந்தப்பாடலின்
வெற்றிக்கு காரணம்….
இந்தப்பாடலை இயற்றியவர் அ.மருதகாசி.
பாடியவர்கள் – ஏ.எம்.ராஜா-பி.சுசீலா.
காட்சியில் எஸ்.எஸ்.ஆர். மற்றும் விஜயகுமாரி.
துவக்க காலங்களில், வெறும் பாடலை மட்டும் தான்
கேட்டுப்பழக்கம்… பதிவு செய்து வைத்திருந்தேன்….
பிற்காலத்தில் தொலைக்காட்சிகள், யூ-ட்யூப், வசதிகள்
வந்தபிறகு தான் அந்த பாடல் காட்சியை பார்த்தேன்…
“தென்றல் உறங்கியபோதும், திங்கள் உறங்கியபோதும்”
இந்த பாடல் வானொலியில் அடிக்கடி கேட்டது .
உங்களை போல You Tube வந்த பிறகுதான்
பார்க்க முடிந்தது .
எதனால் இந்த பாடல் நினைவில் நிற்கிறது என்பது
விடை இல்லாத ஒரு கேள்வி .