
இந்தப்பாடலை கேட்கும்போதே ஒருவித
உற்சாகம் தொற்றிக்கொள்ளும்…..
இளமை பொங்க குதித்துக்கொண்டு கடற்கரையில்
ஆட்டம் போடும் சிவாஜியும், பத்மினியும் ….
அவர்களுக்கு இணையாக துள்ளும்
விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசை….
சிலருக்கு சி.எஸ்.ஜெயராமன் குரல் பிடிக்காது….
காரணம் கேட்டால் எந்த கதாநாயகனுக்கும்
அவரது குரல் பொருந்தாது என்பார்கள்….
அதனாலென்ன –
எந்த கதாநாயகன் ஒரிஜினலாக பாடுகிறார்…?
எல்லாருக்குமே பின்னணிக் குரல் தானே….?
எனவே கதாநாயகனையும், பாடலையும்
பிரித்து ரசிப்பதில் நமக்கென்ன சிரமம்….?
சி.எஸ்.ஜெயராமன்,
கண்டசாலா –
ஆகிய இருவருக்குமே மிகவும் வித்தியாசமான குரல்கள்.
ஆனால் – எனக்கு இருவர் குரலும் மிகவும் பிடிக்கும்.
இது 1957-ல் வெளிவந்த “புதையல்” படத்தின் பாடல் ….
பாடலை இயற்றியவர் எம்.கே.ஆத்மநாதன் –
“விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே “
பல நல்ல பழைய பாடல்களைத் தந்து இரைமீட்க வைப்பதற்கு நன்றி!