50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே …..

” இளமையெல்லாம் வெறும் கனவு மயம் –
இதில், மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது, முடிவும் தெரியாது –
மயங்குது எதிர்காலம் ….

பல காலம் வரை….
இந்த வார்த்தைகள் என் சிந்தையில் சுழன்றுகொண்டே இருந்தன.

15 முதல் 25 வயது வரை இருந்த அந்த காலங்களில் –
எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ…
வாழ்க்கையில் எந்தவித உத்திரவாதமும் இல்லாத நிலையில்
எதிர்காலத்தை எப்படி சந்திக்கப்போகிறோம் என்கிற அந்த கவலை –
மனநிலை – அந்த காலத்து இளைஞர்கள் பலருக்கும் இருந்திருக்கும்….

SSLC -க்கு மேல் படிக்க முடியாமல், வேலையும் கிடைக்காமல்,
வீட்டில் தண்டச்சோறு பட்டம் வாங்கிக்கொண்டு லட்சக்கணக்கான
இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருந்த காலம் அது….

( முதலில், அவ்வளவு கவலையில் இருந்த நான் பிறகு SSLC
ரிசல்ட் வரும் முன்பே வேலை தேடிக்கொண்டு விட்டது
என் அதிருஷ்டம் …!!! படிப்பே தேவைப்படாத அந்த
என் முதல் வேலையில் என் மாதச் சம்பளம் அறுபது ரூபாய்…! )

இப்படி, பலரது வாழ்க்கைக்கு தொடர்புடைய விஷயங்களை
எல்லாம் தொட்டு விட்டு, கூடவே –
இந்த நிஜவாழ்க்கை சம்பந்தங்களையெல்லாம் தாண்டி –

கதையின் பாத்திரங்களை சரியாக உணர்ந்து,
கதையையும், ஆழமாக உள்வாங்கிக்கொண்டு,
கவிஞர் கண்ணதாசன் இயற்றி
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் உருவாக்கிய இந்த பாடல் –
பலரது வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் ….

கதைக்கும், காட்சிக்கும், அந்த காட்சியில் தோன்றும்
3 கதா பாத்திரங்களுக்கும் மிகவும் பொருத்தமாக
அமைந்திருக்கும் இந்தப்பாடலின் வரிகள்.
படத்தைப் பார்த்தவர்களுக்கு இது நன்றாகப் புரிந்திருக்கும்.

உற்சாகத்தையும், ஏக்கத்தையும் – ஒரே பாடலில்
குழைத்துத்தர மெல்லிசை மன்னரால் எப்படித்தான் முடிந்ததோ…!!!!

படம் – பாக்கியலக்ஷ்மி
வெளிவந்த வருடம் – 1961

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to 50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 5 ) -மாலைப் பொழுதின் மயக்கத்திலே …..

  1. மெய்ப்பொருள் சொல்கிறார்:

    சந்திரகான்ஸ் ராகம் .
    பாடல் வரி , இசை , குரல் எல்லாம் அற்புதம் .
    கண்ணதாசன் வரிகள் கேட்கும் போது ஸ்ரீ ஆண்டாள்
    எழுதிய நாச்சியார் திருமொழி ஞாபகம் வரும்.

    பி சுசீலா அவர்கள் மிக ஈடுபாட்டோடு பாடிய
    அவருக்கு பிடித்த ஒரு பாடல் .
    தோழி என்பதை பிசிறடிக்காமல் பாடியிருப்பார் .

    பாடலில் ஒரு சில இடத்தில ஷெனாய் வருகிறது.
    திரு ராமமூர்த்தி செய்த நகாசு வேலை !
    சோகத்தை அப்படியே கொண்டு வருகின்றது .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.