எடப்பாடியார் நன்றாக கதை விடுகிறார் …..!!!

எடப்பாடியாரும், ஓபிஎஸ் அவர்களும், மெனக்கெட்டு
டெல்லி வரை சென்று, பிரதமரை சந்தித்துவிட்டு
திரும்பி இருக்கிறார்கள்… அவர்களை சந்திப்பதற்கென்று
பிரதமரும் விசேஷமாக நேரம் ஒதுக்கித் தந்திருக்கிறார்.

வெளியே வந்த எடப்பாடியார் – செய்தியாளர்களிடம்
கூறி இருக்கிறார்….

” சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக
பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்கு
தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம்
வலியுறுத்தினோம்.

மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி
தரக்கூடாது என்றும் பிரதமரிடம் கூறினோம்.

நீர்ப்பற்றாக்குறையை போக்க காவிரி-கோதாவரி இணைப்பு
திட்டத்தை செயல்படுத்த கோரினோம்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை
தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். “

எடப்பாடியாரே – தான் சொல்வதை, மற்றவர்கள்
நம்புவார்கள் என்று நினைக்கிறாரோ இல்லையோ –

ஆனால், நாம் அவசியம் நம்புவோமாக….

எடப்பாடியாருக்கு நன்றாக கதை சொல்லத் தெரிகிறதென்று….!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to எடப்பாடியார் நன்றாக கதை விடுகிறார் …..!!!

  1. sridhar சொல்கிறார்:

    Sir, keeping aside the politician’s revelation to the press, I will squarely blame the Press for the Mess we are in now. The Press wants to know everything and will report what they want. So the politicians also are making a mockery of them. I doubt if this is the only thing Mr.EPS told the press or is this the only thing that the press wants us to know 😦

    Neither Mr.EPS nor the press will tell the truth.

  2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஸ்ரீதர்,

    நீங்கள் சொல்வதும் உண்மையே.
    அரசியல்வாதிகள் முழு உண்மையை
    சொல்வதில்லை என்பதில் வியப்பில்லை;
    அது அவர்களின் இயல்பு.

    ஆனால், செய்தியாளர்கள் -மீடியாக்கள்
    அவரவர்க்கு சௌகரியமான செய்திகளை,
    அவர்களுக்கு வேண்டிய கோணத்தில்
    வெளியிடுகிறார்கள் என்பது தான்
    வருந்தத்தக்க விஷயம்.

    நடுநிலைச் செய்தியாளர்கள் / தொலைக்காட்சிகள்
    என்பதை இப்போதெல்லாம் காண்பது
    அரிதான விஷயமாகி விட்டது.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.