….
….
திருவிளையாடல் படத்தில் சிவாஜியின்
“பாட்டும் நானே – பாவமும் நானே”
பாட்டு சீன் – படம் பார்த்த யாருக்கும் மறக்கவே மறக்காது…
….
….
அந்தப் பாடலை மீண்டும் எப்போது, எங்கே கேட்டாலும்,
சிவாஜியின் முக பாவனைகள் தான் முன்வந்து நிற்கும்…
இங்கே மேடையில் அருகில் இசையமைப்பாளர்
கே.வி.மஹாதேவன் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க –
ஒரிஜினல் பாடகர் டி.எம்.சௌந்திரராஜன்
அந்தப் பாடலைப் பாடுகிறார்…
ஆனால், எனக்கென்னவோ சிவாஜி பாடுவது
போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது – உங்களுக்கு….???
டி.எம்.எஸ். ஒரு அற்புதமான வரம் பெற்ற, குரல் வளம் பெற்ற
பாடகர். அவரையும், சிவாஜியையும் பிரித்துப்பார்க்கவே
முடியவில்லை…!!! அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் குரலால்
ஒன்றிணைந்திருந்தார்கள்.
………………
————–
.
——————————————————————————————————————————————–