….
….
….
சில நிமிடங்களுக்கு முன், எதேச்சையாக –
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களைப்பற்றியும்,
துக்ளக் ஆசிரியர் சோ அவர்களைப்பற்றியும்,
ரஜினிகாந்த் அவர்கள் பேசிய காணொளி
ஒன்றை பார்க்க நேரிட்டது.
1996-ல் ஜெயலலிதா மிகவும் மனம் வருந்தும்படி
தான் பேசியதாகவும், நடந்துகொண்டதாகவும் –
அவருடைய தேர்தல் தோல்விக்கு தானும் ஒரு
காரணமாக இருந்ததாகவும் வெளிப்படையாகச் சொல்கிறார்.
ஜெயலலிதா மனம் வருந்தும்படி தான் பேசியதை
வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் ரஜினி அதே சமயத்தில்
– தான் பேசியது தவறு என்றும் சொல்லவில்லை;
அதற்காக மன்னிப்பும் கேட்கவில்லை;
அவர் வருத்தப்படும்படி நான் நடந்துகொண்டேன் என்கிறார்…
அன்றைய சூழ்நிலையில் அப்படிப் பேசியது
அவசியமாக இருந்தது என்பது அவரது மன ஓட்டமாக
இருந்திருக்கலாம்.
இன்றைய காலகட்டத்தில், இப்படியெல்லாம்
வெளிப்படையாக உண்மைகளைப் பேசுபவர்களை
பொதுவாழ்வில் காண்பது அரிதாகவே இருக்கிறது.
ரஜினியின் ஒளிவுமறைவற்ற பேச்சு – மன நிறைவைத் தருகிறது.
…………………………
…………………………
.
——————————————————————————————————————————————