…
…
…
மனிதத்தை மறந்து,
“மதம்” கொண்டு –
வெறி பிடித்து ஆடி 38 உயிர்களை பலிவாங்கிய டெல்லியின்
“அந்த” மனிதர்களுக்கு –
இந்த இடுகையை சமர்ப்பிக்கிறேன்.
—————————-
…
…
இந்த புகைப்படங்கள் ஸ்பெயின், கார்டோபாவிலுள்ள
மசூதி – கதீட்ரல் என்று அழைக்கப்படும் ஒரு வித்தியாசமான
இடத்தினுடையவை…..
எப்படி வித்தியாசம்…?
துவக்க காலத்தில், எட்டாம் நூற்றாண்டு வரை, இது ஒரு சிறிய
கிறிஸ்தவ தேவாலயமாக இருந்தது. ( Catholic Basilica of
Saint Vincent of Lérins )
கி.பி.784-ஆம் ஆண்டில், இஸ்லாமிய (அப்துல் ரெஹ்மான்-I) கால
கட்டத்தில் இது ஒரு மிக பிரம்மாண்டமான மசூதியாக விரிவாக்கம்
செய்யப்பட்டது.
இந்த மசூதி, 16-வது நூற்றாண்டில், கிருஸ்தவர்களின் ஆட்சி காலத்தில்
மீண்டும் ஒரு ரோமன் கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றப்பட்டது.
இந்த மசூதி – கதீட்ரலின் விசேஷம் என்ன….?
இப்போதும் தொழுகை நேரத்தில் தன்னந்தனியாக ஒரு இஸ்லாமியர்
வந்து இந்த தளத்தில் பாங்கும் தொழுகையும் நடத்துகிறார்.
அவரை தொழுகையில் ஈடுபட அனுமதித்து –
அந்த நேரத்தில், கிறிஸ்தவர்கள் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள்.
அவர் வந்து சென்றபிறகு மீண்டும் தங்கள் பிரார்த்தனையை
தொடர்கிறார்கள்…
உலகில் கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.
மத நல்லிணக்கம் அதில் மிக முக்கியமானது – அமைதியான,
நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிக மிக அவசியமானது…..!!!
இதுவரை இதை உணராதவர்கள்,
இப்போதாவது உணர்ந்து திருந்த வேண்டும்…
எல்லாருக்கும் பொதுவான “அந்த” இறைவன் அதற்கு உதவுவானாக…
….
….
.
——————————————————————————————————————————————————————
அற்புதம்.
மத நல்லிணக்க உணர்வு இந்தியா முழுவதும் இந்தியர்கள் அனைவருக்கும் இருக்கலேண்டும்.
வாழ்க வளமுடன்
பொருத்தமான, மிகவும் அவசியமான
ஒரு கட்டுரை சார்.
intelligence failure என்று வர்ணிக்கப்படுகிறது.
failure என்று எதைச் சொல்ல முடியும் ?
அடுத்து என்ன நிகழும் என்று யூகித்து,
அதற்கான உரிய எதிர் வினையாற்றவில்லையென்றால்
அல்லது
செயல்பட வேண்டிய ஒரு விஷயத்தை
முன் கூட்டியே யூகித்துச் செயல்படத் தவறினால்
அல்லது
எடுத்துக்கொண்ட ஒரு காரியத்தில்
தோல்வியுற்றால் அதை failure என்று சொல்லலாம்.
ஆனால் –
யாருக்கும் இது வேண்டுமென்று செய்யப்பட்டது
என்று நினைக்கத் தோன்றாமல் –
செயல் இப்படி இருக்க வேண்டும்,
அதன் விளைவுகள் இப்படி இப்படி இருக்க வேண்டும்
ஆனால்,
வெளிப்பார்வைக்கு இது failure என்று தோன்ற வேண்டும்;
என்று திட்டமிட்டு
அது அதை அப்படியே நிகழ்த்திக் கொண்டால்
அதை intelligence failure என்று சொல்வதா
அல்லது
Highly Intelligent Act என்று சொல்ல வேண்டுமா ?
‘என் வழி” சொல்வது தான் சரி.
கிரிமினல் கன்ஸ்பைரசி-க்காக உள்ளே
தள்ளப்பட வேண்டியவர்களை,
ஜஸ்ட் ஃபெயிலியர் என்கிற கோணத்தில் பார்ப்பது,
கொலைக்குற்றம் புரிந்தவர்களை ட்ராஃபிக் வயலேஷன்
செய்தவர்களைப் போல் ட்ரீட் செய்வதாகவே இருக்கும்.
என் வழி, புவியரசு –
உங்கள் கருத்து தான் என் கருத்தும்.
டெல்லி கலவரங்களின் பின்னால்,
கடுமையான உள்நோக்கங்கள்
இருந்திருக்கின்றன.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
காலம் அதையெல்லாம் வெளிப்படுத்தும்.
தவறு செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
நம்புவோம். காத்திருப்போம்.
.