புதிய “காவிரிமைந்தன்” தோற்றம்….!!!

.

.

தஞ்சையில் ஒரு புதிய “காவிரிமைந்தன்” உருவாகி
இருப்பதாக நண்பர் டுடேஅண்ட்மீ செய்தி
அனுப்பி இருக்கிறார்.
அவர் அனுப்பியுள்ள தகவல் கீழே –

puthiya-kavirimainthan

“காவிரிமைந்தன்” என்கிற பெயருக்கு காப்புரிமை
( “copyright” ) எதுவும் இல்லை என்பதால்,

எளியவன் நான் என்ன செய்ய முடியும் …!
பதிலுக்கு “நான் தான் ஒரிஜினல்” என்று
போஸ்டர் அடித்து ஒட்டவா முடியும்…?

காசு செலவில்லாமல் –
உங்கள் பழைய காவிரிமைந்தனை மறந்து விட
வேண்டாம் என்று இந்த வலைத்தளத்தின் மூலம்
நண்பர்களை கேட்டுக் கொள்வதைத்
தவிர –

நான் வேறென்ன செய்ய முடியும்…? 🙂 🙂

.

.
-வாழ்த்துகளுடன்,
என்றும் உங்கள் (பழைய…) காவிரிமைந்தன்

k-m-logo

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to புதிய “காவிரிமைந்தன்” தோற்றம்….!!!

  1. today.and.me சொல்கிறார்:

    அப்போ நீங்க இல்லையா ஜீ அது…
    😀 😀
    ஒருவேளை நீங்கள்தான் அந்த ‘அம்பி’க்கு அந்நியனோ என்று நினைத்து உண்மையிலேயே பயந்துகொண்டிருந்தேனே.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப டுடேஅண்ட்மீ,

      ஒரு வேளை என்னை நேரில் பார்க்க நேரிட்டால் …..
      உங்கள் அபிப்பிராயம் தலைகீழாக மாறி விடக்கூடும்…. 🙂 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • Lala சொல்கிறார்:

        காவிரியும் , today & me யும் அம்பியும் ரெமோவும் போலத்தானே ?
        இருவரும் ஒருவர்தானே ?

        • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          நண்ப லாலா,

          வறட்சி ….
          கற்பனைப் பஞ்சம்….
          இன்னும் கொஞ்சம் பொருத்தமாக யோசித்திருக்கலாமே… 🙂 🙂

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

        • today.and.me சொல்கிறார்:

          நண்ப லாலா,

          இருவரும் ஒருவர் இல்லை.
          ஓரளவு ஒத்த எண்ணங்களுடைய இருவர்.
          அவ்வளவே.
          தெளிந்துவிட்டீர்களா? 😀

  2. ஹாஹாஹா உங்களை மறக்க முடியுமா ஐயா ?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக கில்லர்ஜி,

      எவ்வளவு நாட்களாயிற்று உங்களை இங்கே பார்த்து…
      ஏற்கெனவே நீங்கள் என்னை மறந்து போய் விட்டீர்கள்
      என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

      என் நல்ல காலம்…உடனே வந்து உறுதி சொன்னீர்கள்.
      நன்றி கில்லர்ஜி.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. srinivasanmurugesan சொல்கிறார்:

    ஹ்ஹஹா….. புதிய காவிரிமைந்தனின் சாயம் இன்னும் கொஞ்சநாளில் வெளிக்கப்போகிறது பாருங்கள்

  4. LVISS சொல்கிறார்:

    Dont worry Mr K M there is only one Kaveri Mainthan in the world of Tamil blogs —

  5. தமிழன் சொல்கிறார்:

    அப்போ. காவிரி மைந்தன்னு போட்டுக்க தஞ்சைப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லையா? கர்நாடகால சொத்து வச்சிருந்தாப் போதுமா?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப தமிழன்,

      கர்நாடகாவில் மட்டுமா…. 🙂 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  6. selvarajan சொல்கிறார்:

    நண்பர்களே …. ! போஸ்டரில் ஒரு ” காவிரிமைந்தனை பார்க்கிறீர்கள் — நமது விமரிசன இடுகையின் காவிரிமைந்தனை எல்லோருக்கும் தெரியும் — இன்னொரு ” காவிரி மைந்தனும் ” இருக்கிறார் … அவர் பெயர் திரு .R . வெங்கடேஷ் { அனுஷா வெங்கடேஷ் } — பல சரித்திர நாவல்களை எழுதுபவர் — இந்த குழப்பம் இருந்த சூழலில் நமது கா. மை . அவர்கள் — அந்த காவிரி மைந்தன் என்கிற வெங்கடேஷுக்கு எழுதிய ஒரு ” பின்னூட்ட குறிப்பு ” உங்களின் பார்வைக்கு :— // vimarisanam – kavirimainthan Says:

    December 14, 2011 at 6:33 am
    my dear thiru R.Venkatesh,

    let me introduce myself as a wordpress blog writer
    who is writing in the name of kavirimainthan (!)
    and my blog’s address is –

    http://www.vimarisanam.wordpress.com

    I have not published my photograph anywhere so far.
    Some blog friends , ;who have seen your photo just
    took it that it is me and also wrote to me about it.

    Then I searched and found you in the web.
    NICE !

    Anyway – it is nice that I had your introduction this way.
    I love writer Kalki and i enjoy his historicals.

    I am happy that you are also an admirer of Kalki.

    Ok – will be in touch when chance occurs.

    with all best wishes
    -kavirimainthan //
    http://www.vimarisanam.wordpress.com

    அந்த காவிரி மைந்தனைப் பற்றி அறிய https://kavirimainthan.wordpress.com/about/ சொடுக்கவும் …..

    அடுத்து ” போஸ்டர் காவிரிமைந்தனுக்கு ” இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டது போல ஒரு செய்தியை — அந்தக்கால காவிரிமைந்தன் வெளியிட்டுள்ளார் அது : –// ஸ்டாலின்தான் எனது அரசியல் வாரிசு: கருணாநிதி பேட்டி //
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-is-my-political-heir-says-karunanidhi-an-interview-265364.html?utm_source=tamil&utm_medium=home-right-widget&utm_campaign=people-talk — இனி ” ஆட்டம் — பாட்டம் — கொண்டாட்டம் ” …. தானே … ?

    • today.and.me சொல்கிறார்:

      நண்ப செல்வராஜன்,

      முகவின் தந்திரம்
      எல்லாம் ஸ்டாலினுக்கும் சபரீஷனுக்கும்
      சுட்டுப்போட்டாலும் வராது.
      அவர்கள் மிகப் பிரயத்தனப்பட்டு
      முகவின் பெயரால் ஒரு பேட்டியை வெளியிட்டால்
      ஒற்றை வரி அறிக்கையில்
      சின்னாபின்னமாக்கிவிடுவார் தலைவர்
      என்பது ஊருக்கே தெரிந்த உண்மை.
      மகனுக்கும் மகனுடைய மருமானுக்கும் தெரியாமல்போனதுதான் விந்தை.

      ————–

      விகடன் மற்றும் ஒன்இந்தியாவில் பேட்டி அல்லது கட்டுரை வந்தால் அதெல்லாம் சப்ப ரீஷன்…

      அடுத்தநாள் ஒரு க்கன்னாவோட சின்ன துண்டறிக்கை வந்தால்
      அதுதான் மெயின் சீன்…

      இதோ தகப்பனே மகனின் டங்குவாரை அத்துவிடும் பேட்டி…

      http://www.newsfast.in/news/no-one-questioned-dmk-chief-post–karunanithi

      டேய் தகப்பா மொமண்ட் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.
      😀 😀

  7. B.V.Subramanian சொல்கிறார்:

    தமிழ்நாட்டில் இன்றிருக்கும் அரசியல்வாதிகளில்,
    கலைஞர் கருணாநிதி அளவிற்கு
    தந்திரமாக பேச, நடந்துகொள்ள வேறு யாரும் இல்லை
    என்பது தான் உண்மை. மஹாபாரதத்தில் சகுனிக்கு ஈடான
    பாத்திரம் வேறு யாராவது உண்டா ?

  8. Srini சொல்கிறார்:

    KM sir,

    kalki na sadasivam
    nakeeran na gopal
    kavignar na kannadasan
    kalaignar na karunanidhi
    amma na jayalaitha
    captain na vijayakanth
    arignar na anna
    mahatma na gandhi
    adhupola, vimarisanam na adhu kaverimainthan…

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஸ்ரீநி,

      உங்கள் பிரியம் காரணமாக என்னை மிக உயர்ந்த
      இடத்தில் தூக்கி வைக்கிறீர்கள்.
      நட்பின் வெளிப்பாடு இது. மிக்க நன்றி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  9. selvarajan சொல்கிறார்:

    சூப்பர் … ! ஒன்பது பின்னூட்டங்களுக்கு — எட்டு மறுமொழிகள் — ஆஹா.. ஓஹோ … அருமையான விறு விறுப்பான இடுக்கை // புதிய “காவிரிமைந்தன்” தோற்றம்….!!! // — தொடர்க … !!!

  10. Karthik சொல்கிறார்:

    Ayya
    Your are getting more attention than ever. thats what i can read from the proxy guy. My motto is very simple.
    Do Right; Fear Nobody.
    You pen is very much mightier Sir.

    thanks for posting good things
    karthik

  11. Narasimhan சொல்கிறார்:

    அவரை மனுநீதி சோழனின் மைந்தன் என்றல்லவா நான் எண்ணியிருந்தேன் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.