கேட்ரினாவும் ராகுல் காந்தியும் …
காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ
பேச்சாளர் (official
spokesperson) ஆத்திரப்படுவதற்கு
பதில் சிறிது அறிவுபூர்வமாக யோசித்து
பேசி இருக்கலாம் !இப்போது அநாவசியமாக
நம்மை யோசிக்க வைத்து விட்டார் !
கேட்ரினா கைப், ராகுல் காந்தியைப்
பற்றி சொன்னாரே – அதைப் பற்றி –
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு
செய்தியாளர் கேட்டதற்கு –
“யாரைப் பற்றித் தான் அபிப்பிராயம்
சொல்வது என்று ஒரு வரைமுறை
வேண்டாமா ?
விட்டால் -நாளைக்கு ஜானி லீவர்
(ஒரு கடை மட்ட இந்தி நகைச்சுவை
நடிகர் ) எதாவது சொன்னால் –
அதைப் பற்றி கூட அபிப்பிராயம்
கேட்பீர்கள் போலிருக்கிறதே” என்று
எரிந்து விழுந்திருக்கிறார் !
அவர் அப்படி கடுப்படித்தது தான் –
என்னை யோசிக்க வைத்தது.
இந்த ஆள் ஏன் இப்படி காய்கிறார் ?-
அப்படி கேட்ரினா கைப் என்ன தான்
சொல்லி இருப்பார்
ராகுல் காந்தியைப் பற்றி ?
என்று பழைய மும்பை
செய்திகளை தேடிப்பார்க்க வைத்தது.
தேடிய செய்தியும் கிடைத்தது.
சுவையான் செய்தி தான் !
4-5 நாட்களுக்கு முன்னர்
ஒரு நிருபர் கேட்ரினாவை
கேட்டிருக்கிறார் “நீங்கள் உங்கள்
தாயைப் பற்றிய விவரங்களை ஏன்
மறைக்கிறீர்கள் ? நீங்கள் உண்மையில்
இந்தியரா இல்லையா ?” என்று.
(கேட்ரினாவின் தந்தை காஷ்மீரைச்
சேர்ந்த ஒரு இந்தியர்.தாய் ஒரு
பிரிட்டிஷ் பெண்மணி.)
சுடச்சுட திரும்பக் கொடுத்திருக்கிறார்
கேட்ரினா. “என் நாட்டைப்பற்றிச்
சொல்ல நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?
நான் அரை ஐரோப்பிய + அரை இந்தியப்
பெண் தான்.”
இத்தோடு விட்டிருந்தால் தேவலை தான்.
கூடவே சொல்லி இருக்கிறார் –
“ஏன் ராகுல் காந்தி இல்லையா –
அரை இத்தாலிய + அரை இந்தியனாக?”
என்று.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருக்கு
கடுப்பாக இருந்தாலும் – நமக்கு இது
ஒரு புதிய கோணம் !
நம் மொழியில் நாம் யோசித்ததே
இல்லையே !- “அரை இந்தியன்”
(half Indian !) –பொருந்துமா ?
அரை இந்தியன் k இப்படியென்றால்? if as a full indian?
ராஹு ஒரு அரை இந்தியன் மட்டுமல்ல!
அவர் ஒரு …
குரை இந்தியன்;
அறை குறை இந்தியன்;
தப்பித்தவறி, ஏதேனும் ஒரு
ஒரு நிறை இந்தியன்,
பிரதமரானால்,
ராஹு
கறை இந்தியன் என நிரூபிக்கப்பட்டு
சிறை இந்தியனும் ஆவார்
//ராஹு ஒரு அரை இந்தியன் மட்டுமல்ல!
அவர் ஒரு …
குரை இந்தியன்;
அறை குறை இந்தியன்;
தப்பித்தவறி, ஏதேனும் ஒரு
ஒரு நிறை இந்தியன்,
பிரதமரானால்,
ராஹு
கறை இந்தியன் என நிரூபிக்கப்பட்டு
சிறை இந்தியனும் ஆவார்//
ஆகா அகா!!!
கவிதை!!
கவிதை!!
பதிவ விட பின்னூட்டம் அருமை, அதனால் அதற்க்கு மறுமொழி. 🙂