பணக்கார பரத்தைகளும், சாராய வியாபாரிகளும்
சமூகத்தில் பெறும் மரியாதை ………
கீழே சில படங்கள் –
அவை எடுக்கப்பட்டது –
ஐபிஎல் கிரிக்கெட் பந்தயத்தின்போது !
அவற்றில் முக்கிய இடம் பெற்றிருப்பவர்கள் –
இந்தி நடிகை – தீபிகா படுகோனே
“தொழில்” அதிபர் – விஜய் மல்லையா
மற்றும் அவர் மகன் !
– தலைப்பிற்கு வருவோம்.
ஒரு பக்கம் –
1) இரவு நேரங்களில் – சாலை ஓரங்களில்,
பஸ் நிலையங்களில், ரெயில் நிலையங்களில் –
மலிவான லாட்ஜுகளில்,
அரை இருட்டான இடங்களில்
தலையில் வாசனைப் பூவுடன்,
அரைகுறையாக பவுடர் பூசிய முகத்துடன்
வயிற்றுப் பிழைப்பிற்காக
உடலை விற்கும் வேறு வழியற்ற /
வக்கற்ற பெண்கள் ….
2) ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில்,
கிராமங்களுக்கு வெளியே – புதர் வெளிகளில்
பூச்சி பொட்டுகளுக்கு இடையில், வியர்க்க
விருவிருக்க பயந்து பயந்து சாராயம் விற்கும்
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் / விற்பவர்கள் –
இவர்கள் சந்திக்கும் இன்னல்கள் எத்தனை எத்தனை?
இடைத்தரகர்களுக்கு காசு,
பிடிக்கும் போலீஸ்காரர்களுக்கு மாமூல்,
காரியம் ஆவதற்காக
பலர் இவர்களை நாடினாலும்,
காரியம் முடிந்த பிறகு பார்க்கும் பார்வை –
சமுதாயத்தில் இவர்கள்
பெறும் இடம் …….அந்தஸ்து ..
இன்னொரு பக்கம் –
1) முதலில் கூறிய பெண் செய்த அதே செயலை –
ஆளை மயக்கும் அலங்காரங்களுடன்,
சொக்க வைக்கும் வாசனை பூச்சுகள் துணையுடன்
பசையுள்ள வாலிபர்களாகத் தேடி அலைந்து,
பசை போல் ஒட்டிக்கொள்ளும் அணங்குகளும்-
ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ள ஒரு
விளையாட்டு நிகழ்ச்சியில்,
பல கோடி மக்கள் தொலைக்காட்சியில்
நேரடியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று
தெரிந்தும் கோடீஸ்வர தந்தையின் குலக்கொழுந்து
என்கிற ஒரே காரணத்திற்காக ( அவனும்
அவனது அப்பனும் எவ்வளவு அசிங்கமாக
இருந்தாலும் கூட ) வலிய இணைந்து கட்டிப்பிடித்து
உதடுகள் இணைய – பலர் பார்க்க –
முத்தம் கொடுக்கும் பணக்கார பரத்தைகளும் –
2) இரண்டாவதாக கூறிய –
அதே சாராயம் காய்ச்சும் தொழிலை –
அரசியல்வாதிகளுக்கு லஞ்சமும்,
அரசுக்கு பணமும் கொடுத்து
லைசென்ஸ் என்று ஒன்றை வாங்கி –
லட்சக்கணக்கில் பேரல் பேரல்களாக தொழில் முறையில்
உற்பத்தி செய்து விற்கும் சாராயத் தொழிற்சாலைகளின்
உரிமையாளர்களான “தொழில் அதிபர்” களும் –
ஆக – இரண்டு பகுதிகளிலும் கூறப்பட்டுள்ள நபர்கள்
செய்வது ஒரே தொழிலைத் தான்.
ஆனால் சமுதாயத்தில் அவர்கள் பெறும்
செல்வாக்கு, பணம், அந்தஸ்து ?
எவ்வளவு பெரிய வேறுபாடு ?
வயிற்றுப் பிழைப்பிற்காக, வேறு வழி தெரியாமல்
இந்த இழி தொழிலை செய்யும் –
முதல் பகுதியில்
கூறப்பட்டிருக்கும் பெண்ணோ, வியாபாரியோ –
நம் சமுதாயத்தால் எவ்வளவு கேவலமாக
நினைக்கப்படுகிறார்கள்; நடத்தப்படுகிறார்கள் ?
அதே தொழிலை பகட்டாகவும்,
வெளிப்படையாகவும்
செய்யும் இரண்டாவது பகுதியில் கூறப்பட்டிருக்கும் –
நபர்கள் சமுதாயத்தில் பெறும் செல்வாக்கு,
பணம், அந்தஸ்து என்னென்ன ?
பணத்திற்காக ஆறு மாதங்களுக்கு ஒரு பணக்காரனை மாற்றிக்கொண்டே இருக்கும் அந்த
பணக்கார பரத்தைக்கு பெயர் –
புகழ்பெற்ற மாடல்,
திரை வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் –
அழகு தாரகை !
அந்த சாராய வியாபாரிக்கு பெயர் –
“தொழில் அதிபர்”.
வயது அறுபதைத் தொட்டாலும்,
காதில் வளையத்தோடும், குறுந்தாடியோடும்
மைனராகத் திரிபவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வேறு.
அவர் பாக்கெட்டில் பல எம் எல் ஏக்கள், எம் பி க்கள் !
(35 எம் எல் ஏ க்கள் ஓட்டு போட்டு அவரை ஒரு
ராஜ்ய சபா சுயேச்சை உறுப்பினராக
தேந்தெடுத்திருக்கிறார்கள் ! )
சாராயத்தில் விளைந்த பணத்தில்,
எம்.பி. பதவி, அரசாங்கத்தில் செல்வாக்கு,
விமான கம்பெனி, தொழிலதிபர் பட்டம்.
பற்றாக்குறைக்கு –
கடைசியாக ஐபிஎல் சூதாட்டம் வேறு !
மனசாட்சி சுடுகிறது –
யார் காரணம் இந்த இழி நிலைக்கு ?
சற்றும் தகுதி அற்றவர்களுக்கு எப்படி
இத்தனை பணம், பதவி, புகழ், செல்வாக்கு ?
நம் சமூகம் ஏன் போலிகளைத் தாங்குகிறது –
கொண்டாடுகிறது ?
//நம் சமூகம் ஏன் போலிகளைத் தாங்குகிறது –
கொண்டாடுகிறது ?// சமூகமும் சீரழிந்து கொண்டுதான் இருக்கிறது. மீடியா, அரசியல் எங்கும் பரத்தைகளின் ஆதிக்கம்தான்.
உலகத்துக்கே-
நாகரிகத்துக்கு முன்னோடி
நம் இந்திய திருநாடு !
இங்கு-
கலந்திருக்கும் நச்சுகள்
இளைய தலைமுறையை
எங்கு அழைத்து செல்லுமோ????
என்கிற பயம்-
கனவிலும் தொடர்கிறது?!!!!!!!
thanks & blessings
all of u
rajasekhar.p
நம் நாட்டில், அரசியல் சரியாகும்வரை மற்ற எதுவும் சரியாகாது!
மக்கள் சரியாகும்வரை அரசியல் சரியாகாது.
கடவுள் மனதுவைத்தால் ஒழிய மக்கள் சரியாக மாட்டார்கள்!
எனவே இந்த நாட்டை கடவுள் காப்பாற்றினால்தான் உண்டு..