யார் காலை யார் வாரினார்கள் ?
விவரம் சொல்லும் புள்ளி விவரங்கள் …
கூட்டணி கட்சிகள் செயல்பட்டது எப்படி –
யார் காலை யார் வாரினார்கள் –
எந்த அளவிற்கு கட்சிகள் கூட்டணிக்கு
விசுவாசமாக இருந்தன
என்கிற விவரங்கள் எல்லாம் –
தற்போது துல்லியமாக
கிடைக்கின்றன.
தேர்தலில் ஓட்டுக்கள் எந்த மாதிரியில் (pattern)
போடப்பட்டு இருக்கின்றன என்பதைப் பார்த்தால் –
கூட்டணிகள் எந்த அளவிற்கு பயன் அளித்திருக்கின்றன
என்பதும் புரிகிறது.
திமுக கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்தவை
காங்கிரஸ், பாமக, விடுதலைச்சிறுத்தைகள் ஆகியவை.
இதில் 124 இடங்களில் போட்டியிட்ட திமுக
இந்த 124 இடங்களிலும் பெற்ற மொத்த ஓட்டுக்களின்
சராசரி 42.11 %.
கூட்டணி 100 % ஒழுங்காக செயல்பட்டிருந்தால் கூட்டணி
கட்சிகள் அனைத்துமே கிட்டத்தட்ட இதே அளவு
சராசரி ஓட்டுக்கள் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ்
பெற்ற சராசரி ஓட்டுக்கள் – 35.64 % மட்டுமே.
30 இடங்களில் போட்டியிட்ட பாமக பெற்ற
சராசரி ஓட்டுக்கள் – காங்கிரசை விட அதிகம் –
அதாவது 39.60 %.
ஆனால் – 10 இடங்களில் போட்டியிட்ட
விடுதலைச்சிறுத்தைகள் பெற்ற சராசரி ஓட்டுக்கள் –
காங்கிரஸ், பாமக
இரண்டையும் விட குறைவு – அதாவது 34.01 % மட்டுமே.
(காங்கிரஸ் கட்சி குறைவாக வாங்கியதற்கு காரணம்
புரிகிறது. ஆனால் விசிக காங்கிரசை விட குறைவான
சதவீதம் ஓட்டு வாங்கி இருப்பதன் அர்த்தம் என்ன ?
திருமா யோசிக்க வேண்டும் !)
அதிமுக கூட்டணியிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன
என்றாலும் – அங்கே நிச்சயமாக இதை விட
தேவலை தான்.
அதிமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளான –
அதிமுக 165 இடங்களில் (அதிமுக சின்னம்) போட்டியிட்டு
சராசரியாக 53.93 % ஓட்டுக்கள் பெற்றிருக்கிறது.
அடுத்தபடியாக தேமுதிக – 41 இடங்களில் போட்டியிட்டு
சராசரியாக 44.84 % ஓட்டுக்கள் பெற்றிருக்கிறது.
ஆனால் 12 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட சிபிஎம்
சராசரியாக 50.29 % ஓட்டுக்களைப் பெற்றிருக்கிறது.
சிபி ஐ 10 இடங்களில் போட்டியிட்டு
சராசரியாக 48.63 % ஓட்டுக்களைப் பெற்றிருக்கிறது.
2 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட சிறிய கட்சியான
புதிய தமிழகம் 54.30 % ஓட்டுக்களை (அதிமுகவை விட
அதிகம்) பெற்றிருக்கிறது.
திமுக கூட்டணியை விட அதிமுக கூட்டணியில் ஓரளவு
ஒத்துழைப்பு அதிகம் என்று தோன்றினாலும்,
தேமுதிக விஷயத்தில் மட்டும்
சற்று பாதிப்பு இருப்பதாகவே தெரிகிறது.
ஆனால் திமுக கூட்டணியில் வெளிப்படையாக
ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் –
உள்ளுக்குள் எல்லா கட்சிகளுமே ஒன்றை ஒன்று
காலை வாரி விட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது !
சூப்பருங்கோ.. நான் படிச்ச பெரிய பெரிய பத்திரிக்கைகள் கூட இந்த மாதிரி அனலைஸ் பண்ணலை. கீப் இட் அப்.
நல்ல ஆராய்வு..உண்மையும் கூட!
இனிமேலும் விஜயகாந்த் சற்று கவனமாக இருப்பது நல்லது..
ஒரு பக்கம் அவரை “விஜெயாகாந்த்” ஆக்க எல்லா முயற்சியும் செய்யப்படும்
இன்னொரு பக்கம் அவரை “விஜயகாங்” ஆக்கவும் எல்லா முயற்சியும் செய்யப்படும்!!
இதில் சிக்காது,அவர் “விஜயகாந்த்” ஆகவே 5 வருடங்கள் தொடர்ந்து நன்கு பணி ஆற்றினால், தமிழ்மக்கள் அவரை “வெற்றிகாந்த்” ஆக மாற்றுவர் !
சி.பி.எம் எப்பவும் கூட ஊடு வாங்குதுங்க ஆனாலும் பாருங்க தனிய நிக்க மாடெனுது தனியா நிக்க மாடென்னுது.