தமிழ்ப் புத்தாண்டு விவகாரம் –
காத்தோடு போயாச்சு கலைஞர் உத்திரவு !
ஏற்கவில்லை மத்திய அரசு !
சித்திரை முதல் நாளுக்கு பதிலாக, தை முதல்
நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றி கலைஞர் அரசு
பிறப்பித்த உத்திரவை மத்திய அரசு ஏற்கவில்லை.
மாறாக இன்றைய தினத்தை (சித்திரை முதல் நாள்)
தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று தமிழ் மக்களுக்கு
புத்தாண்டு வாழ்த்தும் சொல்லி இருக்கிறது
மத்திய அரசு.
சான்று – இன்றைய தினம் வெளியாகியுள்ள
மத்திய அரசின் கீழ்க் காணும் விளம்பரம் –
புத்தாண்டு பஞ்சாங்கம் படித்ததால் இந்துக்கள் கைது!
கருணாநிதியின் இந்து-விரோத ஆட்சி எல்லைகளை மீறுகின்றது.
முன்பு “கணக்கு” கேட்டு மாட்டிக் கொண்ட கருணாநிதி, இப்பொழுதும் “கணக்கு” தெரியாமல் மாட்டிக் கொண்டுள்ளது தெளிவாகிறது.
வானியல் அறிவே இல்லாத குருட்டு கருணாநிதி, வருட ஆரம்பித்தை மாற்றியது, இந்துக்களை எவ்வாறு கட்டுப்படுத்தும்?
http://antihidnu.wordpress.com/2010/04/15/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/
இந்துக்களின் நம்பிக்கைகளில் தளையிடுதல்: ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், தடையை மீறி பஞ்சாங்கம் வாசிக்க வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்தமிழக அரசு, தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்ததை தொடர்ந்து, சித்திரை முதல் நாளில் கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பதற்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது. சித்திரை முதல் தேதியான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பதற்கு, இந்து முன்னணி மாவட்ட செயலர் ராமமூர்த்தி தலைமையில் கண்ணன்சிவா, சிவராஜன், ஆர்.எஸ்,எஸ்.,பொறுப்பாளர் தெட்சிணாமூர்த்தி, மண்டபம் ஒன்றிய செயலர் பிரபு உள்ளிட்டோர் கோவிலுக்குள் செல்ல ஊர்வலமாக வந்தனர். இவர்களை கோவில் வாசலில் தடுத்த போலீசார், உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, கோவில் வாசலில் பஞ்சாங்கத்தை வாசித்ததால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.
http://dravidianatheism.wordpress.com/2010/04/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%94%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D/