பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே ? பல கேள்விகள் !


பெப்ஸி விழா -கலைஞர் டிவி  ஒளிபரப்பு – பணம் எங்கே ?

அண்மையில் நடந்த பெப்ஸி விழாவில் அஜித் குமார் மற்றும்
ரஜினி ஆகியோரின் பேச்சு காரணமாக பெரும் சர்ச்சைகள்
உருவாகி இருப்பது  பல கேள்விகளையும் சந்தேகங்களையும்
எழுப்புகின்றன –

1) விழாவை முன்னின்று நடத்தியது பெப்ஸியா அல்லது
கலைஞர் தொலைக்காட்சியா ?

2) நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த விழாவினை
நடத்த அனுமதி கொடுத்தது யார் ?

3) அதற்கான வாடகையும் முன்பணமும் வழக்கம்போல்
பெறப்பட்டதா ?

4) விழாவிற்கான – வரவேற்பு, விளம்பரங்கள்,
இருக்கைகள்,மின்சாரம், ஒளி, ஒலி அமைப்புகள்,
போக்குவரத்து, சாப்பாட்டு மற்றும் இதர வகை
செலவினங்களை ஏற்றுக்கொண்டது யார் ?
பெப்ஸியா ? அல்லது கலைஞர் தொலைக்காட்சியா ?

5)மொத்த செலவு எவ்வளவு ?
யார் கணக்கு வைத்திருக்கிறார்கள் ?

6) விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு –
யாருக்காவது பணம்
கொடுக்கப்பட்டதா ? எவ்வளவு ?

7) இந்த விழாவை முன்னிட்டு  நன்கொடை/
பண வசூல் எதாவது செய்யப்பட்டதா ? ஆம் என்றால்
இந்த வகையில் சேர்ந்த பணம் எவ்வளவு ?

8) செலவு போக மிகுந்த பணம் எவ்வளவு ?
யாரிடம் இருக்கிறது ?

9) நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமைக்காக கலைஞர்
தொலைக்காட்சியிடம்  பணம் எதாவது
பெறப்பட்டதா ? எவ்வளவு ?தொகையை நிர்ணயம்
செய்தது யார் ?

10) இந்த நிகழ்ச்சிகளை கலைஞர் தொலைக்காட்சிக்கு
தான் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தது
யார் ?
அதைவிட அதிகம் தொகை கொடுக்க வேறு
தொலைக்காட்சி நிறுவனங்கள்  முன்வந்தன
என்பது உண்மையா  ?

11) புதிதாக அரசாங்கம் கொடுத்துள்ள
திரைப்பட நகரில்
நிலம் ஒதுக்கும் முறை பற்றி தீர்மானம் செய்யப்பட்டு
விட்டதா ?
எப்போது ? எங்கே ?
எந்த அமைப்பால் ?

12) எந்த அடிப்படையில் நிலம் ஒதுக்கப்படும் ?

13) பெப்ஸி உறுப்பினர்கள் அனைவருக்குமா ?
அல்லது எதாவது வருமான அடிப்படையிலா ?
கிடைக்கும்  நிலம்
அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடு செய்ய
போதுமானதா ?

14)திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு
இதில் முன்னுரிமை எதாவது உண்டா ?

15) ஏற்கெனவே சொந்த வீடு வைத்திருக்கும்
உறுப்பினர்களுக்கும்
இங்கு நிலம் கொடுக்கப்படுமா ?

16) ஏழை உறுப்பினர்களுக்கு மட்டும் தான்
இந்தப் பயன் போய்ச்சேர வேண்டும்.
ஏற்கெனவே வசதி படைத்தவர்கள்
இதில் நுழைந்தால்  நான் சும்மா
பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்-

நான்  யாருக்கும்  பயப்பட மாட்டேன் –
என்று ரஜினி சொன்னது எதை வைத்து ?
யாரை நினைத்து ?

17) ரஜினியைக் குறி வைத்து தாக்குபவர்கள் –
அவர் பேச்சால்
பாதிக்கப்படுகிறவர்கள்  என்பது உண்மையா ?

18) மேடையிலேயே அஜித் குமார் முதல்வரிடம்
மிரட்டுகிறார்கள் என்று புகார் கூறினாரே ? அப்படி
மிரட்டியவர்கள் யாரென்று முதல்வர் கேட்டறிந்துக்
கொண்டாரா ?

19) முதல்வரிடம் தானே  போலீஸ்  துறை
இருக்கிறது –
மிரட்டியவர்கள் மீது என்ன
நடவடிக்கை எடுக்கப்பட்டது ?

20) அவசரம் அவசரமாக ரஜினி மீதும் அஜித் குமார்
மீதும் கண்டனம் தெரிவிக்கும் பெப்ஸி தீர்மானத்தில்
நடிகர் சங்கம் சார்பில் ராதா ரவி கையெழுத்துப்
போட்டது எப்படி ? செயற்குழுவைக்கூட  கலந்து
ஆலோசிக்காமல்
கையெழுத்துப்போட அவருக்கு அதிகாரம் கொடுத்தது
யார் ?

21) நடிகர்/நடிகைகளின்  தன்மானத்தை பாதிக்கும்
அந்த தீர்மானத்தை நடிகர் சங்கத்தின் மற்ற
உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எப்படி
ராதா ரவி நம்பினார் ?

22)அல்லது அப்படித்தான் செய்ய வேண்டுமென்று
அவருக்கு எங்கிருந்தாவது கட்டளை வந்ததா ?

23) நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவைகூட்டி
இந்த கண்டன தீர்மானத்திற்கு ஒப்புதல் வாங்க
அவரால் முடியுமா ?

24) அஜித் குமாரும், ரஜினியும் அப்படிப் பேசியதால்
அவருக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் பாதிப்பு
உண்டா ? இல்லை மிரட்டியவர்களில் அவரும்
ஒருவர் என்பது உண்மையா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அஜித் குமார், அரசியல், அறிவியல், இணைய தளம், இந்தியன், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, கலை நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சி, கூச்சல், சினிமா, தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், நாகரிகம், நிர்வாணம், பொது, பொதுவானவை, மகா கேவலம், மட்டமான விளம்பரம், மிரட்டல், முன்னணி நடிகர்கள், ரஜினி, லாபம், வசூல், வாரிசு, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே ? பல கேள்விகள் !

  1. porko சொல்கிறார்:

    தறு தலைகளுக்கு ஆதரவாக செய்தி போட்டு கருத்து தெரிவிக்க சொன்னால் என்ன சொல்ல ” இதுவே அம்மா ஆட்சியா இருந்திருந்தா பேசுன வாயும், தட்டின கையும் கைமா ஆகியிருக்கும். சூப்பர் க்கு இது நல்லா தெரியும். கருணாநிதி தன இனத்தானை தவிர மற்ற இனத்தவர்களுக்கு இளிச்ச வாயனா? என்ன?

  2. Karthi சொல்கிறார்:

    sir,

    Through envazhi , i visited your site.
    Now Reading all your previous posts.

    from my childhood , i am against the first family of Tamil nadu… i hate them… but i am not the supporter of the other party..

    please keep writing..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.