குமுதம் செய்வது மகா கேவலம் ..
பால குமாரனுடன் என்ன பிரச்சினை ?
இந்த வார குமுதம் இதழில் அரசுவின் கேள்வி பதில் –
குமுதம் செய்வது மிகவும் கீழ்த்தரமான
மகா அருவருப்பான செயல்.
அவர்களுக்கு பாலகுமாரனுடன் எதாவது பிரச்சினை
இருந்தால் – அதைத் தீர்த்துக்கொள்ள இப்படியா
எழுதுவது ?
பாலகுமாரன் விளம்பரப் பிரியர் தான்.
சில விஷயங்களில் போலியும் கூட.
ஆனால் அது வேறு விஷயம்.
அதை நேரடியாகவே விமர்சிக்கலாம். தவறில்லை.
ஆனால் இது போல் அபாண்டமாக எழுதுவது
குமுதத்தை மஞ்சள் பத்திரிக்கை
நிலைக்கு கொண்டுபோய் விட்டது.
Kumudm did not name the writer; but you have named him and now everybody know who is that writer; you are as bad as kumudam
வருக நண்பர் விஸ்வாமித்ரன்,
அந்த எழுத்தாளர் யார் என்பதை
மிகச்சுலபமாக புரிந்து
கொள்ளும்படி தான் குமுதம் எழுதி
இருக்கிறது.இதற்கு மேல் பெயரையும்
எழுதினால் கோர்ட்டுக்குப் போக
வேண்டி இருக்கும் என்பதால் தான்
குமுதம் அதோடு நிறுத்திக்கொண்டது.
பாலகுமாரனிடம் உள்ள நல்லது, கெட்டது
இரண்டையும் தெரிந்தே அவரிடம் உள்ள
அந்த நல்லவைகளுக்காக அவரை
ரசிப்பவன் நான்.
குமுதம் செய்தது மகா கேவலமான
செயல். குமுதம் மஞ்சள் பத்திரிகைகளின்
வரிசையில் சேர்ந்து விட்டது.
நான் அதைக் கண்டித்திருக்கிறேன்.
அதை புரிந்து கொள்ளாமல் –
திடீரென்று நீங்கள் எப்படி இதை எழுதினீர்கள்
என்பது தான் எனக்கு ஆச்சரியமாக
இருக்கிறது.
நீங்கள் எப்படி எழுதினாலும் சரி –
வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
பி.கு. ஆமாம். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு
இந்த இடுகையை எப்படி கண்டு பிடித்து
மறுமொழி எழுதினீர்கள் ?
Dear KM
I have replied for the belated comments in one of my other reply;