கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ?

கலைஞரே குடும்ப விவகாரம்

கொலு மண்டபத்துக்கு
வருவானேன் ?
சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ?
– மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ?


ஓய்வு எடுத்துக்கொள்வது  என்பது என்னுடைய சொந்த
விஷயம்.  அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டாம்
என்று கலைஞர் ஞாயிறன்று வள்ளுவர் கோட்டம்
நிகழ்ச்சியில்  கூறுகிறார் !

சரி – இவர் ஓய்வு எடுப்பதப்பற்றி யார் பேசுகிறார்கள் ?
பொது மக்களா ?

முதன் முதலில் இந்த வம்பைத்துவக்கியவரே
கலைஞர் தான்.
அவர் தான் திடுதிப்பென்று சொன்னார் – உலகத்தமிழ்
செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு ஓய்வு
எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்று.

அதன் பிறகுஅழகிரி சொன்னார்  – 2011 தேர்தலுக்குப்
பின்னரும், கலைஞர் தான் முதல்வர் என்று !

ராஜாத்தி அம்மாள் விகடன் பேட்டியில் சொன்னார் –
தலைவரிடம் நான் 1000 தடவை கண்டிப்பாகக்கூறி
விட்டேன் அவர் ஓய்வு எடுக்கக்கூடாது  என்று.

கனிமொழி சொன்னார் – தலைவர் முதல்வராகத்
தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் –
எனவே அவர் தான்
தொடர்ந்து முதல்வராக இருப்பார் என்று !

இவரை நன்றாகப் புரிந்தவராயிறே ஸ்டாலின் –
எவ்வளவு நாளாகப்  பார்த்துக்கொண்டிருக்கிறார் !
கலைஞர் கூறுவதை நம்புவாரா ? ஓய்வுக்கே  ஓய்வு
கொடுப்பார் தலைவர் என்று ஒரே  போடாகப் போட்டார் !

இப்படி ஆளுக்கு ஆள் -கலைஞர் குடும்பத்திலிருந்து தான்
இதைப்பற்றி  பேசிக்கொண்டே  இருக்கிறார்களே  தவிர –
பொதுமக்கள்  அல்ல.

மக்கள்  தெளிவாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள் –
எதிர்காலத்தில் எப்போதாவது –
உருப்படியாகத் தேர்தல் என்று ஒன்று நடந்து  –
அதில்  தி.மு.க. தோற்றால் ஒழிய –
கலைஞர் முதல்வர் நாற்காலியை
விட்டு  நகரப்போவதில்லை என்று  அவர்களுக்கு
நன்கு தெரியும்.
எனவே  அவர்கள்  அநாவசியமாக
பேராசைப்படுவதில்லை !

அவதிப்படுபவர்கள்  எல்லாம், அரசு அதிகாரிகளும்,
போலீஸ் நிர்வாகமும், கட்சியில் உள்ள இரண்டாம்
கட்ட த்லைவர்களும் தான்.

அடுத்து அதிகாரம் யார் கைக்குப் போகும் என்று புரியாமல்
எந்தப்  பக்கம் சாய்வது என்று தெரியாமல் தவியாய்த்
தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தலைவரே – அவர்கள்  மீது இரக்கம் காட்டி  தெளிவாக,
உறுதியாக, இறுதியாக -எதாவது ஒரு முடிவைச் சொல்லி
விடுங்களேன் !
பாவம்  அவர்களும்  பிழைத்துப் போகட்டும் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அறிவியல், ஓய்வு, கனிமொழி, கருணாநிதி, ஸ்டாலின், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ?

  1. chollukireen சொல்கிறார்:

    நாங்களே குழம்பிக் கிடக்கிறோம். எல்லோரையும் அனுஸரித்துப் போகும் நிலையில் இருக்கிறேன். உறுதி எல்லாம் இறுதிக்குப் பின்னாலதான் என்று வசனம் ஒன்று இருப்பது தெரியாதா உங்களுக்கு.

  2. Ram சொல்கிறார்:

    Good blog. Don’t put all in “ITALICS”. It irritates the Eyes.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.