சட்டம் செய்யத்தவறினால் …..
ருசிகா என்கிற 14 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு
உள்ளாக்கி அதன் மூலம் அந்தச் சிறுமியைத் தற்கொலைக்கு
தூண்டிய அயோக்கிய போலீஸ் அதிகாரி – முன்னாள்
ஹரியானா மாநில டிஜிபி – ஆர்.பி.எஸ். ராத்தோர் –
18 வருட இழுத்தடிப்பு வழக்கிற்குப் பிறகு வெறும் 6 மாத
சிறைத்தண்டனை தீர்ப்பு.
அதிலும் அப்பீல் செய்து ஜாமீனில் வெளிவந்த சாமர்த்தியம் !
விளைவு – இன்று நீதிமன்ற வாயிலில், அனைத்து
ஊடகங்களின் முன்னிலையிலும், 23 வயது வாலிபரால்
முகத்தில் கத்திக்குத்து.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று
சிலப்பதிகாரத்தின் மூலம் அன்று உரைத்தார்
இளங்கோவடிகள்.
சட்டம் செய்யத்தவறினால் – சமுதாயம் செய்யும்
என்கிறான் இன்றைய வாலிபன் !
சமுதாய அக்கரையுள்ள, சொரணையுள்ள – அந்த
வாலிபனுக்குப் பாராட்டுகள் !